62
தமிழ்ப் பழமொழிகள்
அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சன் எவருக்கும் உதவுவான்.
அழுத கண்ணீரும் கடன்.
அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.
அழுத பிள்ளை உரம் பெறும்.
அழுத பிள்ளைக்கு வாழைப்பழம். 1405
அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம்.
அழுத பிள்ளை பசி ஆறும்.
- (பி-ம்.) பிள்ளை பிழைக்கும்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம்.
அழுத மூஞ்சி சிரிக்குமாம்; கழுதைப் பாலைக் குடிக்குமாம். 1410
அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை.
அழுதவனுக்கு ஆங்காரம் இல்லை.
- (பி-ம்.) அகங்காரம்
அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம்.
அழுதால் தெரியாதோ? ஆங்காரப் பெண் கொள்ளாதோ?
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். 1415
- (பி-ம்.) அழுதும் அழுதும்,
அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டிரு.
அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும்.
அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுபவிக்க ஒட்டுமா குழந்தை?
- (பி-ம்.) பணயம்.
அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை.
- (யாழ்ப்பாண வழக்கு.)
அழுவார் அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. 1420
அழுவார் அழுவார் தம் துக்கம்; அசலார்க்கு அல்ல.
அழுவார் அற்ற பிணமும் சுடுவார் அற்ற சுடலையும்.
- (பி-ம்.) ஆற்றுவார் அற்ற.
அழையாத வீட்டில் நாய்போல நுழையாதே.
அழையாத வீட்டில் நுழையாத விருந்து.