68
தமிழ்ப் பழமொழிகள்
அறுக்கப் பிடித்த ஆடுபோல.
அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு அரிவாள்.
அறுக்கு முன்னே புடுக்கைத்தா: தீக்கு முன்னே தோலைத்தா என்ற கதை. 1555
அறுக்கையிலும் பட்டினி; பொறுக்கையிலும் பட்டினி; பொங்கல் அன்றைக்கு பொழுதன்றைக்கும் பட்டினி.
அறுகங் கட்டைபோல் அடிவேர் தளிர்க்கிறது.
அறுகங் கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்; அடங்காப் பெண்ணைக் கொண்டவனும் கெட்டான்.
அறுகங் காட்டை விட்டானும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான். 1560
அறுகு போல் வேர் ஓடி.
அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும்.
அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தர மாட்டான்.
அறுத்த கோழி துடிக்குமாப் போல.
அறுத்த தாலியை எடுத்துக் கட்டினாற் போல. 1565
அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்றது போல.
அதுத்தவளுக்கு அகமுடையான் வந்தாற் போல.
அறுத்தவளுக்கு அறுபது நாழிகையும் வேலை.
அறுத்தவளுக்குச் சாவு உண்டா?
அதுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான். 1570
- (ஆண்டி வந்தாலும் பிச்சை போட மாட்டான்.)
அறுத்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்.
- (பி-ம்) அறுத்து விட்டதாம்.
அறுத்தும் ஆண்டவள் பொன்னுருவி.
- (பொன்னுருவி-கர்ணன் மனைவி.)
அறுதலி பெண் காலால் மாட்டிக் கிழிக்கும்.
அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவியா அறுத்தேன்.
அறுந்த மாங்கனி பொருந்திய செங்கம், 1575
அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது.
அறு நான்கில் பெற்ற பிள்ளையும் ஆவணி ஐம்மூன்றில் நடுகையும் அநுகூலம்.
அறு நான்கில் பெற்ற புதல்வன்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு நாலு கூத்தியார்.
- (ஐந்து பெண்சாதி.)
அறுபத்து நாலு அடிக்கம்பத்தில் ஏறி ஆடினாலும் அடியில இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும். 1580