தமிழ்ப் பழமொழிகள்
89
ஆடும் காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.
ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன் ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
ஆடு மந்தையிலே இருக்கும்போதே கோசம் என்னுடையது என்றானாம். 2055
ஆடு மிதித்த தொழியை விட்டு ஆறின தொழியை வாங்கு.
ஆடு மலைமேல் மேய்ந்தாலும் குட்டி கோனானது.
ஆடு மலையேறி வந்தாலும் குட்டி கோனானோடே.
ஆடு மறித்தவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா?
ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா; பெண்டு பிள்ளை இல்லாதவன் தண்டுக்கு ராஜா. 2060
- (தண்டு - சேனை.)
ஆடு மிதியாக் கொல்லையும் ஆளன் இல்லாப் பெண்ணும் வீண்.
ஆடு மேய்த்த இடத்தில் அரை மயிர்கூட இல்லை.
ஆடு மேய்த்தாற் போலவும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற் போலவும்.
ஆடு மேய்ந்த காடு போல.
ஆடு மேய்வது போல். 2065
ஆடு யாரை நம்பும்?
ஆடுவதும் ஆடி அவரைக் காயும் பறித்தாச்சு.
ஆடுவதே மணியமாய் இருக்கிறான்.
ஆடு வரும் பின்னே, தலை ஆடி வரும் முன்னே.
ஆடு வாங்கப் போனவன் ஆனை விலை கேட்டானாம். 2070
ஆடு வீட்டிலே, ஆட்டுக்குட்டி காட்டிலே.
ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?
ஆடு வைத்தவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா?
ஆடு வைப்பதிலும் ஆழ உழுவதே நலம்.
ஆடே பயிர், ஆரியமே வேளாண்மை. 2075
- (ஆடே படைப்பு, ஆரியம் - கேழ்வரகு.)
ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.
ஆடை இல்லாப் பெண்பிள்ளை அரைப் பெண்பிள்ளை.
ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்.
ஆடைக்கும் கோடைக்கும் ஆகாது.
ஆடை பாதி, அமுத்தல் பாதி. 2080
ஆடை பாதி, அழகு பாதி.