தமிழ்ப் பழமொழிகள் 3/5

விக்கிமூலம் இலிருந்து
சோ


சோணாசலத்திற்குச் சிறந்த க்ஷேத்திரம் இல்லை; சோமவாரத்திற் சிறந்த விரதம் இல்லை.

(சோணாசலம்-திருவண்ணாமலை.)

சோதி இல்லா வானமும் நீதி இல்லா அரசனும்.

சோதி பிறவாதோ? சம்பா விளையாதோ? 11650

(சோதி-சுவாதி நட்சத்திரம்.)


சோதி மின்னல்.

சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

சோம்பல் அம்பலம் வேகிறதே என்றால் அதைச் சொல்வானேள்? வாய் வலிப்பானேன் என்பானாம்.

சோம்பல் இல்லாத தொழில் சோதனை இல்லாத் துணை.

(இல்லாத துணை.)

சோம்பலுக்குத் தொடர்ச்சி இளைப்பு; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி முடம். 11655

(மூடத்தனம்.)


சோம்பலே சோறு இன்மைக்குக் காரணம்.

(பிரதானம்.)

சோம்பலே துன்மார்க்கத்திற்குப் பிதா,

சோம்பேறி அம்பலம் தீப்பற்றி எரியுதடா; அதைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் நோவானேன்?

சோம்பேறிக்கு ஒரு வேலையும் தீராது.

சோம்பேறிக்குச் சோளம் வேளாண்மை. 11660


சோம்பேறிக்குச் சோறு கண்ட இடம் சுகம்.

சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

சோம்பேறி கோல் எடுத்தால் நூறு ஆடு ஆறு ஆடு ஆயினவாம்.

சோம்பேறித் தனத்துக்குப் பசிதான் மருந்து.

சோமசுந்தரம், உம் சொம்பு பத்திரம். 11665


சோழ நாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து; சேர நாடு வேழம் உடைத்து.

சோழ நீதி பெண்டு விற்றுப் போகிறதா?

சோழபுரத்தானோ? சூது பெருத்தானோ?

சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?

சோழவரத்துக் குப்பு, சோப்புப் போட்டுக் குப்பு. 11670

(ருப்பு.)


சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

(சிண்டு.)

சோழியன் குடுமியைச் சுற்றிப் பிடித்தாற் போல.

சோழியன் கெடுத்தான்.

(தொண்டரடிப் பொடியாழ்வார் திருமலையைப் பாடவில்லை.)

சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.

சோளக் கொல்லையில் மாடு மேய்ந்தால் சொக்கனுக்கு என்ன? 11675


சோளப் பயிரை மேய்ந்த மாட்டுக்குச் சொர்க்க லோகம் வேண்டுமா?

சோளி சோளியோடே, சுரைக் குடுக்கை ஆண்டியோடே.

சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?

சோற்றால் எடுத்த சுவர்.

(அடித்த.)

சோற்றில் இருக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன் மோகனக் கல்லைத் தாங்குவானா? 11680


சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்கு என்றால் சொக்கநாதர் கோயில் மதிலைப் பிடுங்குகிறேன் என்கிறான்.

சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்க முடியவில்லை. சொக்கநாத சுவாமி அடிக்கல்லை பேர்க்கிறானாம்.

சோற்றில் இருந்த கல்லை எடுக்காதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?

(இருந்த ஈயை)

சோற்றில் கல் எடுக்க அறியாதவன் முகவணைக் கல் எடுப்பானா?

சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன், ஞானத்தை எப்படி அறிவான்? 11685


சோற்றிலே மலம்; தெளிவாய் இறு.

(வாரு.)

சோற்றின் மறைவில் பத்தியம் பிடிக்கிறது.

சோற்றுக்கு அலைந்தவன் சோளத்தைப் போடு; காய்க்கு அலைந்தவன் பீர்க்கைப் போடு.

சோற்றுக்கு ஆளாய்ப் பறக்கிறான்.

சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்னதை எல்லாம் கேட்பான். 11690

(இல்லாத பார்ப்பான்.)


சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?

சோற்றுக்கு இல்லாத வாழைக்காயைப் பந்தலில் கட்டித் தொங்கவிடுகிறதா?

சோற்றுக்கு இளைத்தாலும் சொல்லுக்கு இளைக்கிறதா?

சோற்றுக்கு ஏற்ற பலம்.

சோற்றுக்குக் கதிகெட்ட நாயே, பெரும் பொங்கல் அன்றைக்கு வாயேன். 11695


சோற்றுக்குக் கதி கெட்ட நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயேன்.

சோற்றுக்குக் காற்றாய்ப் பறக்கிறது.

சோற்றுக்குக் கேடு; பூமிக்குப் பாரம்.

சோற்றுக்குச் சூறாவளி; வேலைக்கு வெட்ட வெளி.

சோற்றுக்குத் தாளம் போடுகிறான். 11700


சோற்றுக்கும் கறுப்பு உண்டு; சொல்லுக்கும் பழுது உண்டு.

சோற்றுக்கு வீங்கி.

சோற்றுக்கு வீங்கினவன் பேளுக்குறிச்சி போக வேண்டும்; அடிக்கு வீங்கினவன் போச்சம்பாளையம்போக வேண்டும்.

(போச்சம் பாளையம்-திருச் செங்கோட்டுக்கு அருகில் உள்ள ஊர்)

சோற்றுக்கே தாளமாம்; பருப்புக்கு நெய் கேட்டானாம்.

சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்குச் சிம்மாசனம் போட முடியுமா? 11705


சோற்றுச் சுமையோடு தொத்தி வந்த நொள்ளை.

சோற்றுப் பானை உடைந்தால் மாற்றுப் பானை இல்லை.

சோற்று மறைவிலே யாரடா? சுரக்காரன் பத்தியம் பிடிக்கிறேன்.

சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?

சோற்றைக் கொடுத்துத் தொண்டையை நெரிப்பபது போல. 11710


சோற்றைப் போட்டு மென்னியைப் பிடித்தாற் போல

சோற்றை விடுவானேன்? சொல்லுக கேட்பானேன்?

(தூற்றை.)

சோறு அகப்பட்ட இடம் சொர்க்கம்.

(சோறு கண்ட இடம்.)

சோறு இல்லாமல் செத்தவன் இல்லை.

சோறு இல்லையேல் ஜோலியும் இல்லை. 11715

சோறு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும்.

சோறு என்ன செய்யும்; சொன்ன வண்ணம் செய்யும்.

சோறு கண்ட இடம் சுகம்.

சோறு கண்ட இடம் சொர்க்கம்; கஞ்சி கண்ட இடம் கைலாசம்.

சோறு கிடைக்காத நாளில் ஜோடி நாய் எதற்கு? 11720


சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?

(பா - ம்.) சுனை நீர் சிந்தினால்.

சோறு சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால் பொறுக்கலாமா?

சோறு சிந்தினால் பொறுக்கலாம்; மானம் சிந்தினால் பொறுக்கலாமா?

சோறும் சீலையும் கேளாமல் இருந்தால் சொந்தப் பிள்ளையைப் போலப் பார்த்துக் கொள்கிறேன்.

(பெற்ற பிள்ளையைப் போல வளர்த்துக் கொள்கிறேன்.)

சோறும் இலையும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம். 11725


சோறும் துணியும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம்.

சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவு இல்லை.

சோறு போட்டு மலமும் வார வேண்டியது ஆயிற்று.

சோறு வேண்டாதவன் கருப்புக்குப் பயப்படான்.

(கருப்பு - பஞ்சம்.)
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/5&oldid=1158158" இலிருந்து மீள்விக்கப்பட்டது