தமிழ்ப் பழமொழிகள் 3/11

விக்கிமூலம் இலிருந்து
து


துக்கத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தொட்டிச்சியைக் குத்தகையாக வைத்துக் கொண்டானாம்.

துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும்; கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும்.

துக்கப்பட்டவருக்கு வெட்கம் இல்லை.

துக்கம் அற்றவனுக்குச் சொக்கட்டான். 12900


துக்கம் உள்ள மனசுக்குத் துன்பம் ஏன் வேறே?

துக்கலூரிலும் கல்யாணம்; துடியலூரிலும் கல்யாணம்; நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது.

துக்கிரிக்குத் துடையிலே மச்சம்.

துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை.

(கோழி.)

துக்குணிச் சொகன். 12905

(சொக்கணை.)


துஞ்சி நின்றான்; மிஞ்சி உண்ணான்.

துட்டுக்கு இரண்டு; துக்காணிக்கு மூன்று.

துட்டுக்கு எட்டுக் குட்டி ஆனாலும் துலுக்கக் குட்டி உதவாது.

(என்றாலும்.)

துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும் வட்டிக்கு ஈடு ஆகாது.

(அல்ல.)

துட்டுக்கு ஒரு சேலை விற்றாலும் நாய் பிட்டம் அம்பலம். 12910


துட்டுக்கு ஒரு பிள்ளை கொடுத்தாலும் துலுக்கப் பிள்ளை கூடாது.

துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? திட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ?

துட்டைக் கொடுத்துத் துக்கத்தை வாங்கிக் கொண்டாளாம்.

துடிக்கக் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறது.

துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. 12915

துடுப்பு இருக்கக் கை வேளானேன்?

(நோவானேன்? வேகுமா?)

துடைகாலி முண்டை துடைத்துப் போட்டாள்.

துடைகாலி வந்ததும் எல்லாம் தொலைந்து போச்சுது.

துடை தட்டின மனிதனும் அடை தட்டின வீடும் பாழ்.

துடைப்புக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினது போல. 12920


துடையில் புண், மாமனார் வைத்தியம்.

துடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா?

துண்டுப் பாளையக்காரன் இடைநடுவில் அடிக்கிறது போல.

(துடிக்கிறது.)

துண்டும் துணியும் சீக்கிரம் விலை போகும்; பட்டும் பணியும் பையத்தான் விலை போகும்.

துணிக்குப் போதுமானபடி சொக்காய் வெட்டு; வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாதே. 12925


துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை; அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.

துணிந்த மல்லுக்குத் தோளில் சுட்டால் அதுவும் ஒரு ஈக்கடி.

துணிந்த முண்டையைத் துடையில் சுட்டால் அதுவும் ஒர் ஈக்கடி என்று சொன்னாளாம்.

துணிந்தவருக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.

துணிந்தவன் ஐயம்பேட்டையான். 12930


துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.

துணிந்தவனுக்குத் துணை வேண்டுமா?

துணிந்தவனுக்குப் பயமா?

துணிந்தாருக்குத் துக்கம் உண்டா? பணிந்தாருக்குப் பாடு உண்டா?

துணியைத் தூக்குவதற்கு முன்னே தொடையில் வைப்பது போல. 12935

(இடக்கர்.)


துணிவது பின்; நினைவது முன்.

துணிவும் பணிவும் துக்கம் தீர்க்கும்.

துணை இரண்டானால் தூக்கணத்துக்கு மனைவி இரண்டு.

துணை இருப்பாருக்கு வினை இழைப்பதா?

துணை உடையான் படைக்கு அஞ்சான். 12940


துணைக்குத் துணையும் ஆச்சு: தொண்டைக் குழிக்கு வினையும் ஆச்சு.

துணைப்பட்டால் சாக வேணும்; பிணைப்பட்டால் இருக்க வேணும்,

(பட்டால்.)

துணை பெற்றவன் வீண் போகான்.

துணை போய் இரு; பொங்கினதைத் தேடு.

துணை போனாலும் வினை போகாதே. 12945


துணையோடு அல்லது நெடுவழி போகேல்.

(போகாதே.)

துப்பட்டியில் கிழித்த கோவணந்தானே?

துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தாற் போல.

துப்பு அற்ற நாரிக்குக் கொம்பு அழகைப் பார்.

துப்பு அற்ற புருஷனுக்குத் துறுதுறுத்த பெண்டாட்டி. 12950


துப்பு அற்றவனை உப்பிலே பார்; சீர் அற்றவனை நீரிலே பார்.

துப்புக் கெட்ட சாம்பானுக்கு இரட்டைப் படித்தரம், தூர்ந்த கிணற்றுக்கு இரட்டை ஏற்றம்.

துப்புக் கெட்ட நாய்க்கு இரட்டைப் பங்கு.

(பயலுக்கு.)

துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு இரட்டைப் பெண்டாட்டி.

துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு. 12955


துப்புக் கெட்டவளுக்கு இரட்டைப் பரிசமா?

(பரியம்.)

தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

தும்பைத் தறித்து வாலைப் பிடிப்பது போல.

தும்பை விட்டுப் பிடிக்க வேண்டும்.

தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே. 12960

(பிடிப்பது போல.)


தும்மல் நன்னிமித்தம்,

தும்மினால் குற்றம், இருமினால் அபராதம்.

தும்பினால் மூக்கு அறுந்து போகிறதே!

தும்பினும் குற்றம்; ஒழியினும் குற்றம்.

தும்முகிற போது போகிற மூக்கா? 12965


துயரப்பட்டால் ஆறுதல் உண்டு; துன்பப் பட்டால் தேறுதல் உண்டு.

துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.

துர்ச்சனன் உறவிலும் சற்சனன் பகை நலம்.

துர்ச்சனனைக் கண்டால் தூர விலகு.

(துர்ச்சனரை.)

துர்ப்பலத்திலே கர்ப்பிணி ஆனால் எப்படி முக்கிப் பெறுகிறது? 12970


துர்ப்புந்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்; சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்.

துரியோதனன் குடிக்குச் சகுனி வாய்த்ததைப் போல.

துருசு கல்வி; அரிது பழக்கம்.

(அரிப்பது பழக்கம்.)

துருத்தியைக் கண்ட இரும்பா?

துரும்பு கிள்ளுவது துர்க்குறித்தனம். 12975


(துர்க்குறிப் பழக்கம்.)

துரும்பு தூண் ஆகுமா?

துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது?

துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையை நுழைப்பான்.

(கட்டுவான்.)

துரும்பும் கலத் தண்ணீர் தேக்கும்.

துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும். 12980


துரும்பைத் தூண் ஆக்குகிறதா?

துரும்பை மலை ஆக்காதே.

துரும்பை வைத்து மூத்திரம் பெய்கிறதா?

துரை ஆண்டால் என்ன? துலுக்கர் ஆண்டால் என்ன?

துரை இஷ்டம்; கனம் இஷ்டம். 12985


துரை உதைத்தது தோஷம் இல்லை; பட்லர் சிரித்தது பழியாய் வளர்ந்தது.

துரைகளுடனே சொக்கட்டான் ஆடினாற் போலே.

துரைகளோடே சொக்கட்டான் ஆடினால் தோற்றாலும் குட்டு; வென்றாலும் குட்டு.

துரைகளோடே சொக்கட்டான் ஆடினாற் போல.

துரைகளோடே சொக்கட்டான் போடலாகுமோ? 12990


துரை கையில் எலும்பு இல்லை.

துரைச் சித்தம் கனச்சித்தம்.

துரை நல்லவர்; பிரம்பு பொல்லாதது.

துரை நாய்ச்சியார் கும்பிடப் போய்ப் புறப்பட்ட ஸ்தனம் உள்ளே போச்சுது.

துரை வீட்டு நாய் நாற்காலி மேல் ஏறினது போல. 12995


துரை வீட்டு நாயைக் கண்டு தோட்டி நாய் கறுவினாற் போல.

துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.

துரோபதையைத் துகில் உரிந்தது போல.

துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.

துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை. 13000


துலுக்குக் குடியில் ஏது பேயாட்டம்?

துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி?

துலுக்கத் தெருவிலே ஊசி விற்றது போல.

துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினது போல.

(திருவெம்பாவை.)

துலுக்கன் உடுத்துக் கெட்டான்; பார்ப்பான் உண்டு கெட்டான். 13005


துலுக்கன் கந்தூரி தூங்கினால் போச்சு.

துலுக்கன் செத்தால் தூக்குவது எப்படி?

துலுக்கன் துணியால் கெட்டான்; பார்ப்பான் பருப்பால் கெட்டான்.

துலுக்கன் புத்தி தொண்டைக்குழி வரைக்கும்.

துலுக்கன் வீட்டில் துணிக்கு என்ன பஞ்சம்? 13010


துலுக்கனுக்கு ஏன் துறட்டுக் கடுக்கன்?

துவி நாக்கு இடறும்.

துவைத்துத் தோள்மேற் போட்டுக் கொண்டான்.

துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல; வினாவிக் காட்டாதது கல்யாணமும் அல்ல.

(வினாவிச் செய்யாதது.)

துள்ளாதே, துள்ளாதே ஆட்டுக்குட்டி. என் கையில் இருக்கிறது சூரிக் கத்தி. 13015


துள்ளாதே, துள்ளாதே, குள்ளா, பக்கத்தில் பள்ளமடா.

துள்ளிக் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப் பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.

துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.

துள்ளின மாடு பொதி சுமக்கும்.

துள்ளுகிற கெளுத்துச் செத்துப்போகிறது தெரியாதா? 13020

துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.

துள்ளும் மாள் துள்ளித் துரவில் விழுந்தது.

துள்ளு மறி கொலை அறியாது.

துளசிக்கு வாசனையும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே உண்டு.

(தெரியும்)

துளி என்றால் நீர்த்துளி. 13025


துற்றிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமாம் கிணறு அநேகம்.

(துள்ளிச் சமுத்திரம்.)

துறக்கத் துறக்க ஆனந்தம்; துறந்தபின் பேரின்பம்.

துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?

(வாய்க்கு எட்டுமா.)

துறவறம் இல்லறம் மனசிலே.

துறவறமும் பழிப்பு இன்றேல் எழிலதாகும். 13030

(தண்டலையார் சதகம்.)


துறவிக்கு வேந்தன் துரும்பு.

துறுதுறத்த வாலு, துக்காணிக்கு நாலு.

துன்பத்திற்கு இடம் கொடேல்.

துன்பத்தின் முடிவு இன்பம்.

துன்பம் உற்றவர்க்கு இன்பம் உண்டு. 13035


துன்பம் தருகிற காக்கையின் சத்தத்தால் அதை விரட்டுவார்கள்; இன்பம் தருகிற குயிலை விரட்டார்கள்.

துன்பம் தொடர்ந்து வரும்.

துன்பம் முந்தி; இன்பம் பிந்தி.

துஷ்ட சகவாசம் பிராண சங்கடம்.

துஷ்ட சதுஷ்டயம். 13040

(பாரதம்.)


துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம்.

துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்.

துஷ்டர் நேசம் பிராண நஷ்டம்.

துஷ்டருடன் சேருவதைவிடத் தனியே இருப்பது மேலானது.

துஷ்டரைக் கண்டால் தூர விலகு; கெட்டாரைக் கண்டால் காறி உமிழ். 13045


துஷ்டனைக் கண்டால் எட்டி நில்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

(ஓடு.)
தூ


தூக்கணத்துக்குத் துயரம் இல்லை; மூக்கணத்துக்கு முசு இல்லை.

(மூக்கணம்-மூக்ணாங்கயிறு போட்ட எருது.)

தூக்கணாங்குருவி குரங்குக்குப் புத்தி சொன்னது போல.

தூக்க நினைத்து நோக்கிப் பேசு. 13050


தூக்கி ஏற விட்டு ஏணியை வாங்கும் தூர்த்தர் சொல்லைக் கேளாதே.

(ஏணியை எடுக்கும்.)

தூக்கி நிறுத்தடா, பிணக்காடாய் வெட்டுகிறேன் என்றாளாம்.

தூக்கி நினைத்து நோக்கிப் பேசு.

தூக்கிப் போட்டதும் அல்லாமல் குதிரை தோண்டிக் குழிப் பறித்ததாம்.

தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படா. 13055


தூக்கி வினை செய்.

தூக்கினால் சென்னி துணிக்கத் துணித்துவிடு; மாக்கினால் சக்கரம் போல அடை.

தூக்கு உண்டானால் நோக்கு உண்டு

தூங்காதவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனுக்கும் விளங்கும் குட்டி.

தூங்காதவனுக்குச் சுகம் இல்லை. 13060


தூங்காதவனே நீங்காதவன்.

தூங்கிய நாய்க்குத் துடைப்பம் எதிரி.

தூங்கினவன் கன்று கிடாக்கன்று.

(கண்ணு.)

தூங்கினவன் கன்று சேங்கன்று.

தூங்கினவன் சாகிறதில்லை; வீங்கினவன் பிழைக்கிறதில்லை; 13065


தூங்கினவன் தொடையிலே கயிறு திரிக்கிறான்.

தூங்கினவன் தொடையிலே திரித்த வரைக்கும் லாபம்.

தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.

தூங்குகிற நரிக்கு இரை கிடையாது.

(உணவு.)

தூங்குகிற நாய் தூங்கட்டும். 13070


தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினதுபோல.

(எழுப்புவானேன்?)

தூங்குகிற வரிக்காரனை எழுப்பி விட்டால் போன வருஷத் தீர்வையும் கொடுத்துவிட்டுப் போ என்பான்.

தூங்குகிறவன் துடையிலே சுப்பல் எடுத்துக் குத்தினாற்போல,

(தூங்குகிறவன் பிட்டத்திலே.)

தூங்குகிறவனை எழுப்புவானேன்? அவன் தொண்ணூறு பணம் குறைந்தது என்பானேன்?

தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி அத்தாளம் இல்லை என்றாற் போல. 13075


(அத்தாளம் - இரவு உணவு.)

தூங்கும் புலியை வால் உருவி விட்டாற் போல.

தூங்கு மூச்சி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம்.

தூங்குவது சிறிய தூக்கம்; போவதே பெரிய தூக்கம்.

தூண்டா விளக்குப் போல.

தூண்டில் காரனுக்கு மிதப்பிலே கண். 13080

(தக்கையிலே கண்.)


தூண்டில் நுனி இரைக்கு ஆசைப்பட்டு மீன் உயிர் இழப்பது போல.

தூண்டில் போட்டவனுக்குத் தக்கைமேல் கண்.

தூண்டில் போட்டு ஆனை பிடிக்கும் புத்திசாலி.

தூண்டிலில் அகப்பட்ட மீன் துள்ளி நத்தினால் விடுவார்களா?

தூண்டிலைப் போட்டு வராலை இழுக்கிறது. 13085


தூண்டின விரல் சொர்க்கம் பெறும்.

தூணி என்கிற அகமுடையானாம்; தூணிப்பதக்கு என்கிற அகமுடையாளாம்; முக்குறுணி என்று பிள்ளை பிறந்தால் மோதகம் பண்ணி நிவேதனம் செய்தார்களாம்.

தூணில் புடைவையைக் கட்டினாலும் தூக்கிப்பார்ப்பான் தூர்த்தன்.

தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்.

தூணிலும் உண்டு; துரும்பிலும் உண்டு; சாணிலும் உண்டு; கோணிலும் உண்டு. 13090

தூத்துக்குடிச் சந்தையிலே துட்டுக்கு ஒரு பெண்டாட்டி.

தூமத் தீயைக் காட்டிலும் காமத் தீக் கொடிது.

தூமை துடைக்கப் பண்ணும்.

தூய்மை வாய்மை தரும்.

தூர்த்தர் என்போர் சொல் எழுத்து உணரார். 13095

(கையெழுத்து உணரார்.)


தூர்த்தர் சொல்லைக் கேட்டால் வாய்த்திடும் கேடு.

தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே.

தூர இருந்தால் சேர உறவு.

தூர உறவு சேரப் பகை.

தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது. 13100


தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு.

தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.

தூரத்துப் பச்சை பார்வைக்கு இச்சை.

தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு; கிட்டப் போனால் கல்லும் கரடும்.

தூரப் பார்வைக்கு மலையும் சமன். 13105


தூரப் போக வேண்டுமா, கீரைப் பாத்தியிற் கை வைக்க?

தூரப் போய்க் கீரைப் பாத்தியிற் பேண்டானாம்.

துார மண்டலம் சேய மழை; சேர மண்டலம் தூர மழை.

தூர நின்றாலும் தூவானம் நில்லாது.

தூலம் இழுத்த கடா நடுவீட்டில் தூங்குமா? 13110


தூற்றித் திரியேல்.

தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.

தூறு ஆடின குடி நீறு ஆகும்.

தூஷிப்பாரைப் பூஜிப்பார் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/11&oldid=1481914" இலிருந்து மீள்விக்கப்பட்டது