தமிழ்ப் பழமொழிகள் 3/10

விக்கிமூலம் இலிருந்து

தீ


தீப்பட்ட புண்ணில் ஈர்க்கினால் குத்தியது போல.

தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டைக்குப் பஞ்சமா? 12850

(கரிக்குப்பைக்கு.)


திப்பட்ட வீட்டிலே பிடுங்கினது ஆதாயம்.

(அகப்பட்டது மிச்சம்.)

தீப்பட்ட வீட்டுக்குப் பீக்குட்டைத் தண்ணீர்.

தீப்பட்ட வீட்டுக்கு மேல் காற்றுப் போல.

தீப்பட்டால் பூனை காட்டிலே.

தீப்பந்தம் கண்ட ஆனை போல. 12855


தீப்புண் ஆறும்; வாய்ப்புண் ஆறாது.

தீபத்தில் ஏற்றிய தீவட்டி.

தீபாவளிக் கோழியைப் போல.

தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கல் ஆகாது.

தீமை மேலிடத் தெய்வம் கைவிட்டது. 12860


தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.

தீமையை வெல்ல நன்மையைச் செய்.

தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது; தீயார் பணி செய்வதுவும் தீது.

(தீயார் வரை.)

தீயாரோடு இணங்காதே; சேப்பங் கிழங்குக்குப் புளி குத்தாதே.

தீயில் இட்ட நெய் திரும்பி வருமா? 12865


தீயினால் சுட்ட புண் ஆறும்; வாயினால் சுட்ட புண் ஆறாது.

(நாவினால்.)

தீயும் தீயும் சேர்ந்து பெருந்தீ ஆனாற் போல்.

தீயும் பயிருக்குப் பெய்யும் மழைபோல.

தீயைச் செல் அரிக்குமா?

தீயை மிதித்தவன்போல் திகைத்து நிற்கிறான். 12870


தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.

தீர்க்கத் திறன் அற்றவன் தேசிகன் ஆவான்.

தீர்க்கதரிசி, பீங்கான் திருடி.

தீர்த்தக் கரைப் பாவி.

திரக் கற்றவன் தேசிகன் ஆவான். 12875


தீராக் கோபம் போராய் முடியும்.

(பாடாய் முடியும்.)

தீராச் சந்தேகம் போருக்கு யத்தனம்,

தீராச் செய்கை சீர் ஆகாது,

தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.

(துணை.)

தீரா நோய்க்குத் தெய்வமே கதி. 12880


தீராப் பொறிக்குத் தெய்வமே துணை.

தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி.

தீரா வழக்கு நேர் ஆகாது.

தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது.

தீவட்டிக் கொள்ளை கால் வட்டிக்கு ஈடு ஆகாது. 12885

(கால்வட்டிக் கொள்ளைக்கு.)


தீவட்டிக் கொள்ளை போன பின் திருமங்கல்யச் சரடு தேடினாளாம்.

தீவட்டி தூக்க வேண்டுமானாலும் திருமண் போடத் தெரியவேணும்.

(ஸ்ரீரங்கத்தில்.)

தீவட்டியின் கீழ் விளக்கு.

திவாள் திடுக்கிடுவாள்; திண்ணைக்கு மண் இடுவாள்; வருகிற கிழமைக்கு வாசலுக்கு மண் இடுவாள்.

தீவிளிக்குத் தீவிளி தலை முழுகுகிறாள். 12890


தீவினை செய்தவர்க்கே சேரும்.

தீவினை செய்யின் பெய்வினை செய்யும்.

(முடியும்.)

தீவினை முற்றிப் பாழ்வினை ஆச்சுது.

(பானை ஆச்சுது.)

தீனிக்கு அடுத்த லத்தி; சாதிக்கு அடுத்த புத்தி.

தீனிக்குத் திம்ம ராஜா, வேலைக்கு வெற்று ராஜா. 12895

(தீனுக்கு.)


தீக்ஷிதன் வீட்டுக் கல்யாணம் திமிலோகப்படுகிறது.

(சிதம்பரத்தில்.)
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/10&oldid=1157911" இலிருந்து மீள்விக்கப்பட்டது