தமிழ்ப் பழமொழிகள் 3/19

விக்கிமூலம் இலிருந்து

பூ


பூ இல்லாக் கொண்டை புலம்பித் தவிக்கிறதோ?

பூ இல்லாமல் மாலை கோத்துப் புருஷன் இல்லாமல் பின்ளை பெறுகிறது போல.

(யாழ்ப்பாண வழக்கு.)

பூ உதிரப் பிஞ்சு உதிரக் காய் உதிரக் கனி உதிர.

பூ உள்ள மங்கையாம், பொற்கொடியாம், போன இடம் எல்லாம் செருப்படியாம். 16840


பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?

பூச்சாண்டி காட்டுதல்.

பூச்சி காட்டப் போய்த் தான் பயந்தாற் போல.

பூச்சி காட்டப் போய்ப் பேய் பிடித்த கதை.

பூச்சி பூச்சி என்றால் புழுக்கை தலைமேல் ஏறும். 16845


பூச்சி பூச்சி என்றாளாம் பூலோகத்திலே; அவளே போய் மாட்டிக் கொண்டாளாம் சாலகத்திலே.

பூச்சி பூச்சி என்னும் கிளி பூனை வந்தால் சீச்சுக் கீச்சு என்னுமாம்.

பூச்சி மரிக்கிறது இல்லை; புழுவும் சாகிறதில்லை.

பூச்சூட்ட அத்தை இல்லை; போரிட அத்தை உண்டு.

பூசணிக்காய் அத்தனை முத்தைக் காதில் ஏற்றுகிறதா? மூக்கில் ஏற்றுகிறதா? 16850

(முத்தை எங்கே இட்டுக் கொள்கிறது?)


பூசணிக்காய் அத்தனை முத்தைப் போட்டுக் கொள்கிறது எங்கே?

பூசணிக்காய் அத்தனையும் சதை.

பூசணிக்காய் அழுகினது போல.

பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.

(தூக்கினவனை.)

பூசணிக்காய்க்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறாய். 16855


பூசணிக்காய் களவாடினவன் தோளைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட கதைபோல.


பூசணிக்காய்ப் பருமன் முத்து; அதைக் காதில் தொங்கவிடலாமா? மூக்கில் தொங்க விடலாமா?

பூசணிக்காய் போகிற இடம் தெரியாது; கடுகு போகிறதை ஆராய்வார்.

பூசப் பழையது பூனைக்கும் ஆகாது.

பூசப் பூசப் பொன் நிறம்; தின்னத் தின்னத் தன்னிறம். 16860

(திருநீறு.)


பூசாரி ஆலய மணியை அடித்தால் ஆனை தெரு மணியைத் தானே அடிக்கும்?

பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.

பூசாரி புளுகும் புலவன் புளுகும் ஆசாரி புளுகில் அரைப் புளுக்குக்கு ஆகாது.

பூசாரி பூ முடிக்கப் போனானாம்; பூவாலங்காடு பலாக்காடாய்ப் போச்சுதாம்.

பூசாரி பெண்டாட்டியைப் பேய் பிடித்த கதை. 16865


பூசுவது தஞ்சாவூர் மஞ்சளாம்; அதைக் கழுவுவது பாலாற்றுக் கரைத் தண்ணீராம்.

பூசை வளர்ந்தது போச்சு.

(பூசை-பூனை.)

பூசை வேளையில் கரடி விட்டு ஒட்டியது போல்.

(பூசை பண்ணுகிற போது. பூசை முகத்திலே, கெருடி.)

பூட்டிக் சுழற்றினால் பறைச்சி; பூட்டாமலே இருந்தால் துரைச்சி.

பூட்டிப் புசிக்காமல் புதைப்பார்; ஈயைப் போல் ஈட்டி இழப்பார். 16870


பூட்டும் திறப்பும் போல.

(திறப்பு-சாவி.)

பூண்டிப் பொத்தறை, ஏண்டி கத்தறாய்?

(பொத்தறை; வட ஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்.)

பூண்டியில் விளையாடும் புலிக்குட்டிப் பசங்கள்.

பூணத் தெரிந்தால் போதுமா? பேணத் தெரிய வேண்டாமா?

பூணாதார் பூண்டால் பூஷணமும் விழுந்து அழும். 16875


பூத்தது என்றால் காய்த்தது என்பது போல.

பூத்தானம் ஆன பிள்ளை ஆத்தாளைத் தாலி கட்டிற்றாம்.

(கட்டினது போல.)

பூத்தானம் ஆன பிள்ளை பிறந்து பூவால் அடிபட்டுச் செத்தது.

(பூத்தானம்.)

பூத்துச் சொரியப் பொறுப்பார்கள்; முட்டிக் கட்டக் கலங்குவார்கள்.

பூத உடம்பு போனால் புகழ் உடம்பு. 16880


பூதலம் தன்னில் இவ்வூர் புண்ணியம் என் செய்ததோ?

பூதலம் யாவும் போற்றும் முச்சுடர்.

பூப்பட்டால் கொப்புளிக்கும் பொன்னுத் திருமேனி.

பூ மலர்ந்து கெட்டது; வாய் விரிந்து கெட்டது.

பூமி அதிர நடவாத புண்ணியவான். 16885


பூமி ஆளலாம் என்று மனப்பால் குடிக்கிறது போல,

பூமி கிருத்தி உண்.

பூமியில் வரகு கொடுத்தால் கொடுக்கலாம்; இல்லாவிட்டால் ராஜன் கொடுக்க வேண்டும்.

பூமியைப் போலப் பொறுமை வேண்டும்.

பூர்வ சேஷ்டை போச்சுதோ, இருக்கிறதோ என்று பார்த்தானாம். 16890


பூர்ளோத்தரம் மேரு சாத்திரம் போல் இருக்கிறது.

பூராடக்காரன் ஊசாடத் தீரும்.

(யாழ்ப்பாண வழக்கு)

பூராடக்காரனோடு போராட முடியாது.

பூராடக்காரி ஊசாட ஊசாடப் பொருள் தொலையும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பூராடத்தன் அப்பன் ஊராடான். 16895


பூராடத்திலே பிறந்தவளுக்கு நூல் ஆகாது.

பூராடத்தின் கழுத்தில் நூல் ஆடாது.

பூராயமாய் வேலை கற்றுக் கொள்ள வேண்டும்.

பூரி இல்லாத கல்யாணமா?

பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். 16900


பூலு அம்மின ஊருல கட்டிலு அம்ம தகுனா?

(-பூவிற்ற ஊரிலே கட்டை விற்கத் தகுமா? தெலுங்கு.)

பூலோகத்தார் வாயை மூடக் கூடுமா?

பூலோக முதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்.

பூவரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?

பூவிரிந்து கெட்டது; வாய் மலர்ந்து கெட்டது. 16905


பூவிலே பூ பூனைப் பூ.

பூ விழுந்த கண்ணிலே கோலும் குத்தியது.

பூ விற்ற கடையிலே புல் விற்றது போல.


பூ விற்ற கடையிலே புல் விற்கவும், புலி இருந்த காட்டிலே பூனை இருக்கவும், சிங்கம் இருந்த குகையிலே நரி இருக்கவும், ஆனை ஏறினவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே.

பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா? 16910


பூ விற்றவளைப் பொன் விற்கப் பண்ணுவேன்.

பூவுக்கும் உண்டு புது மணம்.

பூவும் மணமும் போல.

பூவைத்த மங்கையாம், பொற் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்.

பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெற்றது போல. 16915


பூனியல் தன் வாயால் கெட்டது போல.

(பூனியல்; ஒரு பறவை.)

பூனை இளைத்தால் எலி சுலவிக் களிக்கும்மாம்.

பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேத்தி எடுக்கிறது.

பூனை எச்சில் புலவனுக்குக் கூட ஆகாது; நாய் எச்சில் நாயகனுக்கு ஆகும்.

(புலையனுக்குக் கூட.)

பூனைக்கு இல்லை தானமும் தவமும். 16920


பூனைக்கு ஒரு சூடு போடுவது போலப் புலிக்கும் ஒரு சூடு போடு.

பூனைக்கு ஒன்பது இடத்திலே உயிர்.

பூனைக்குக் கும்மாளம் வந்தால் பீற்றல் பாயைச் சுரண்டுமாம்.

பூனைக் குட்டிக்குச் சிம்மாளம்; ஓலைப் பாய்க்குக் கேடு.

பூனைச்குக் கொண்டாட்டம்; எலிக்குத் திண்டாட்டம். 16925


பூனைக்குச் சிங்கம் பின் வாங்குமா?

பூனைக்குச் சிம்மாளம் வந்தால் பீற்றல் பாயில் புரளுமாம்.

பூனைக்குத் தன் குட்டி பொன் குட்டி.

பூனைக்குப் பயந்தவன் ஆனையை எதிர்த்துப் போனானாம்.

பூனைக்குப் பயந்திருப்பாள்; புலிக்குத் துணிந்திருப்பாள். 16930


பூனைக்கு மருந்து வாங்க ஆனையை விற்பதா?

பூனைக்கு மீன் இருக்கப் புளியங்காயைத் தின்றதாம்.

(தின்னுமா?)

பூனைக்கு யார் மணி கட்டுவது?

பூனை கட்டும் தோழத்தில் ஆனை கட்டலாமா?

(தொழுவத்தில்.)

பூனை கண்ணை மூடினால் உலகமே அஸ்தமித்து விடுமா? 16935


பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம்.

பூனை குட்டி போட்டாற்போல் தூக்கிக் கொண்டு அலைகிறான்.

பூனை குட்டியைத் தூக்கிக் கொண்டு போவது போல,

பூனை குண்டு சட்டியில் தலையை விட்டுக் கொண்டு பூலோகம் எல்லாம் இருண்டு போச்சென்று நினைக்குமாம்.

(இட்டுக் கொண்டு.)

பூனைக் குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா? 16940


பூனை கொன்ற பாவம் உன்னோடே; வெல்லம் தின்ற பாவம் என்னோடே.

பூனை சிரித்ததாம்; எலி பெண்டுக்கு அழைத்ததாம்.

பூனை செய்கிறது துடுக்கு; அதை அடித்தால் பாவம்.

பூனை நோஞ்சல் ஆனாலும் சகுனத்தடையில் குறைவு இல்லை.

பூனை பால் குடிக்கிறது போல. 16945


பூனை பிராமண போஜனம் பண்ணுகிறது என்று பூணூல் போட்டுக் கொண்டதாம் எலி.

பூனை பிராமண போசனம் பண்ணுகிறேன் என்று பூணூல் போட்டுக் கொண்டதாம்.

பூனை புறக்கடை, நாய் நடு வீடு.

பூனை போல் அடங்கினான்; புலிபோல் பாய்ந்தான்.

(ஒடுங்கினான்.)

பூனை போல் இருந்து புலி போல் பாயும், 16950

(பூனை போல் நடுங்கி,)


பூனை போல் ஒடுங்கி ஆனை போல் ஆக்கிரமிக்கிறது.

பூனை போல நடுங்கிப் புலி போலப் பாய்வான்.

பூனை போன்ற புருஷனுக்கு வாழ்க்கைப் பட்ட சுண்டெலிப் பெண் போல்.

பூனை மயிர் ஆனாலும் பிடுங்கினது மிச்சம்.

பூனைமுன் கிளிபோல் புலம்பித் தவிக்கிறது. 16955


பூனையின் அதிர்ஷ்டம், உறி அறுந்து விழுந்தது.

பூனையும் எலியும் போல்.

பூனையைக் கண்ட கிளிபோல.

பூனையைக் கண்டு புலி அஞ்சுமா?

பூனையைக் கொன்ற பாவம் உனக்கு; பிடி வெல்லம் தின்ற பலன் எனக்கு. 16960

பூனையைத் தான் வீட்டுப் புலி என்றும் எலியரசன் என்றும் சொல்வார்கள்.

பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல்,

பூனையை வளர்த்தால் பொல்லாத வழி; நாயை வளர்த்தால் நல்ல வழி.

பூனை வயிற்றில் ஆனை பிறந்தது போல.

பூனை வாய் எலிபோல் புலம்பித் தவிக்கிறது. 16965


பூனை வாயில் அகப்பட்டி எலி போல்.

பூனை விற்ற காசுக்கு ஆனை வாங்க இயலுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/19&oldid=1158000" இலிருந்து மீள்விக்கப்பட்டது