தமிழ்ப் பழமொழிகள்
71
திருடனைப் பிடிக்க ராஜனே வேண்டும்.
திருடனையே காவல் போட்டது போல.
திருடனை ராஜமுழி முழிக்கச் சொன்னானாம்.
திருடனை வைத்துக் கதவைச் சாத்தினது போல.
திருடி என்று தெருவில் போகக் கூடாது; அவிசாரி என்று ஆனைமீதும் ஏறலாம். 12730
திருடிக்குத் தெய்வம் இல்லை; சம்சாரிக்கு ஆணை இல்லை.
திருடிக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கிடைத்தது.
திருடிச் சென்ற கள்ளன் நல்லவன் ஆவானா?
திருடியும் குங்குலியமும் தேவருக்கே.
திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன். 12735
திருத்தங்கலுக்கு மறுதங்கல் கிடையாது.
- (அவ்வூரில் தங்குவது அரிது.)
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்.
திருத்துழாய்க்கு மணம் வாய்த்தாற் போலே.
திருநாளுக்குப் போகிறாயா என்றால் ஆம், ஆம்; திரும்பி வருகிறாயா என்றால் ஊகூம்.
திருநாளுக்குப் போகிறாயா; திண்டிக்குப் போகிறாயா? 12740
திருநாளும் முடிந்தது; எடுபிடியும் கழிந்தது.
திருநாளைக் கண் கொண்டு பார்க்கக்கூட இல்லை.
- (பார்க்க முடியவில்லை.)
திருநீற்றிலே ஒட்டாதது கழற்சிக் காய்.
திருநீற்றுக் கழற்கொடிக்காய் போல.
திருந்த ஓதத் திரு உண்டாமே. 12745
திருநெல்வேலி போய்த் திரும்பினவர் இல்லை.
- (தருபுர ஆதீன வழக்கு.)
திருப்தி இல்லாத எஜமான் வீண்.
திருப்பணி செய்யக் கருத்து இருந்தால் கருப்படியின் பேரிலே விருப்பு இருக்கும்.
- (காத்திருந்தால்.)
திருப்பதி அம்பட்டன் வேலை.
- (திருப்பதியில் நாவிதன் கிடைத்தது போல.)
திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமோ? 12750