214
தமிழ்ப் பழமொழிகள்
பாலருக்கு அழுகை பலம்; மீனுக்குத் தண்ணீர் பலம்.
பாலன் பஞ்சம் பத்து வருஷம் பரியம்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
பாலனும் பால்குடியான்.
பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான். 16155
பால சோதிடம் விருத்த வைத்தியம்.
- (ஜோசியம்.)
பாலிலே குளித்துப் பன்னீரிலே கொப்புளிக்கக் கனாக்காண்கிறான்.
பாலுக்கு உண்டான பவிசும் இல்லை; பல்லக்குக்கு உண்டான மவுசும் இல்லை.
பாலுக்குக் காவல் பூனையை வைத்த கதை.
- (பாலுக்குக் காவல் பூனையா?)
பாலுக்குச் சர்க்கரையும் கூழுக்கு உப்பும். 16160
- (கூழுக்குக் கீரையும்.)
பாலுக்குச் சீனி இல்லை என்பார் கோடி; கூழுக்கு உப்பு இல்லை என்பார் கோடி.
பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குப்பு இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.
- (கூழுக்குடப்பு குல்லை கவலை ஒன்றே,)
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
பாலுக்கு மிஞ்சின சுவையும் இல்லை; பல்லக்குக் மிஞ்சின சொகுசும் இல்லை.
பாலுக்கு மிஞ்சின பவிசும் இல்லை; சொகுசும் இல்லை 16165
- (பாலுக்கு மிஞ்சின பசுவும்.)
பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?
பாலுடன் கூடிய நீர் போல.
பாலும் ஆயிற்று, மருந்தும் ஆயிற்று.
- (ஆம்.)
பாலும் சாதம் சாப்பிடு என்றால் பாழும் வீட்டைக் காக்கிறேன் என்பது போல.
பாலும் சோறுமாய்த் தின்கிற பாளையக்காரன் மோட்டு வளையை எண்ணிகிறது போல. 16170
பாலும் தேனும் கலத்தாற் போல.
- (சேர்ந்தாற் போல.)
பாலும் நீரும் போல
- (+நாரும் பூவும் போல,)