தமிழ்ப் பழமொழிகள்
213
பால் சுடுகிறது என்று ஊதிக் குடிப்பார்கன்; மோர் சுடுகிறதென்று ஊதிக் குடிக்கிறேன்.
பால் சுண்டினாலும் சுவை சுண்டுமா? 16130
பால் சுவை கன்றிலே தெரியும்; பாக்கியவான் பிள்ளை முகத்திலே தெரியும்.
பால் சோற்றுக்குப் பருப்புக் கறியா?
பால் தொட்டுப் பால் கறக்க வேண்டும்.
பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத அதிகாரியும் உண்டா?
- (வாங்காத பிராமணனும்.)
பால் பதக்கும் ஒரு பதக்காய் எண்ணலாம். 16135
பால் பாக்கியம் இல்லாதவன் பணப்பால் கொண்டு வைத்தாலும் இராது.
பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா?
- (பழமொழி தவறுமா?)
பால் பொங்கினால் பால் சட்டியிலே.
பால் பொங்கும், பாக்கியம் தங்கும்.
பால் மலையில் மின்னல் மின்னினால் பால் பொங்குகிற நேரத்தில் மழை பெய்யும். 16140
- (அந்தியூர் அருகே வழங்கும் பழமொழி.)
பால் வாரித்த சோற்றுக்குத்தான் பழத்தைப் போடுகிறது.
பால் வார்த்தவர்களுக்குப் பகை நினைக்கக்கூடாது.
பால் வார்த்து முழுகுவான்.
பால் வாராவிட்டாலும் பால் வார்த்த பானையைப் பார்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
பால் வெள்ளமாகப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். 16145
பால் வேண்டாத பூனையும் பழம் வேண்டாத குரங்கும் உண்டா?
பாலகருக்குப் பலம் அழுகை; மச்சத்துக்குப் பலம் உதகம்.
பாலகன் நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.
பாலகனைப் பறிகொடுத்தவர் மனம்போல,
பாலம் கடக்கிற வரையில் நாராயணா நாராயணா; பாலம் கடந்தால் பூராயணா, பூராயணா. 16150
பாலர் மொழி கேளாதவர் குழல் இனிது யாழ் இனிது என்பார்.
- (குறள்.)