212
தமிழ்ப் பழமொழிகள்
பாருக்கு ஊடாடப் பாறை, பசுமரத்தின் வேருக்கு ஊடாடி விடும்,
- (பார்-கடப்பாறை.)
பாரோர் வாய்ச் சொல் பரமன் வாய்ச் சொல்,
பால் ஆரியனுக்கு; பசு ராமநாத சுவாமிக்கு.
பால் ஆவுடையான் விருந்துக்கு அஞ்சான்.
- (ஆஉள்ளவன்.)
பால் ஆனாய் நெய் ஆனாய்ப் போட்டவன் தலைக்குப் பாக்கும் பிடிக்கிறது. 16110
பால் ஆறு உடையான் விருத்துக்கு அஞ்சான்.
பால் ஆன நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.
பால் ஆனாலும் பசித்துப் புசி.
பால் இருக்கிறது; பாக்கியம் இருக்கிறது; பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.
பால் உண்ட மேனி பற்றி எரிகிறது; நெய் உண்ட மேனி நெருப்பாய் எரிகிறது. 16115
பால் உண்பவனுக்குப் புளிங்காடி கொடுப்பது போல.
பால் உள்ள மாட்டுக் கன்றே கன்று; பணம் உள்ள வீட்டுப் பெண்ணே பெண்.
- (பாக்கியவாள் வீட்டுப் பெண்ணே பெண்.)
பால் உள்ளான் விருந்துக்கு அஞ்சான்.
பால் என்றால் பூச்சி என்கிறான்.
பால் ஏடு ஆகிலும் காலம் அறிந்து உண். 16120
பால் கடலைக் குடிக்கப் பார்க்கும் பூனைபோல்.
- (கம்பராமாயணம்,)
பால் கற என்றால் உதட்டிலே புண் என்கிறான்.
பால் குடிக்கப் பாக்கியம் இல்லாதவன் விலைப்பால் வாங்கினானாம்; அதையும் பூனை குடித்ததாம்.
பால் குடிக்கப் பாக்கியம் இல்லாவிட்டால் விலைப் பால் வாங்கினாலும் பூனை குடித்துவிடும்.
பால் குடித்தவனுக்குப் பால் ஏப்பம்; கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம், 16125
பால் கொடுத்தவள் நினைவுக்கு மேலே பழம் கொடுத்தவள் நினைப்பு,
பால் சட்டிக்குப் பூனையைக் காவல் வைத்தாற்போல.
பால் சாப்பிட்ட வீட்டில் பகை நினைக்காதே.