பாரதிதாசனின் உலகம்
347
மலரிதழ் ஒன்றைத் தூக்கம்
கலைத்திடக் குழந்தைமீது
போட்டனன்! தாயின் கைதான்
மலரிதழ் தனைத்து டைத்து
மற்றும்தன் இடம் போயிற்று"
(குடும்ப விளக்கு - பக். 166-167)
என்ற கவிதை வரிகள் தாயன்பினை விளக்கும் ஒப்பற்ற வரிகள்.
மணந்தோன் அருள் விரும்பும் மங்கை
பாவேந்தன் காதல் கவிதைகள் இயற்றுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக விளங்கினான்: விளங்குகின்றான். இன்று எங்கும் பொருள் மதிப்பீட்டுச் சமுதாயம்! இல்லை, பண மதிப்பீட்டுச் சமுதாயம்! இன்று எங்கும் நுகர்வு நாகரிகமே வளர்ந்து வருகிறது. இன்று பெண்களில் பலர், கணவனை, கண்டதையெல்லாம் வாங்கித் தருமாறு தொந்தரவு கொடுத்துக் கடனாளியாக்கித் தற்கொலை எல்லைக்குக் கொண்டு போய்த் தள்ளிவிடுகிறார்கள். இதுவா காதற் சிறப்புடைய பெண்ணின், அழகு? இல்லை, இல்லை! சிறந்த காதலி பொருளைப் பெரிதென்று கருதமாட்டாள்! அணிகலன்களை வேண்டி நிற்கமாட்டாள்! தன் மணாளனுடைய அருளையே தன் உயிரெனக் கொண்டு வாழ்வாள்! இதுவே பெண்டிர் பெருஞ்சிறப்பு! இதனை,
"பொருளையும் பெரிதென் றெண்ணாள்
பூண்வேண்டாள் தனைம ணந்தோன்
அருளையே உயிரென் றெண்ணும்
அன்பினாள்"
என்று பாடுகிறான்.