32
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அதனால் பாரதி, இந்தியாவைக் கிருதயுகத்தின் சின்னமாக ஒரு குடும்பமாக்கினான். கலியுகத்தில் “வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்” என்று சொன்னானே பாரதிதாசன் அந்தப் பேதங்களின் பெயர்கூட இல்லாமல் சாகடிக்கின்றான்.
- "எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
- யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்;
- முப்பது கோடியும் வாழ்வோம்,-வீழில்
- முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!
- "எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
என்பது பாரதியின் முழக்கம்.
பாரதி, சமுதாயத்தை நச்சுத் தன்மைக்கு ஆளாக்கிய கலியுகத்தின் படைப்பாகிய தனி உடைமைக் குணத்தை மாற்றுகின்றான். முதன் முதலில் தமிழ் மக்களுக்கு - இந்திய நாட்டு - மக்களுக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தை அறிமுகப்படுத்துகின்றான். இந்திய சமுதாயத்தை ஒரே பொது வுடைமைச் சங்கமாக அமைக்கின்றான். பாரத சமுதாயம், பொதுவுடைமைச் சமுதாயமாக உருமாற்றம் பெறுதலை,
- "முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
- முழுமைக்கும் பொதுவுடைமை;
- ஒப்பிலாத சமுதாயம்
- உலகத்துக்கொரு புதுமை”
- "முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
என்றும் பாராட்டுகின்றான்.
பாரதி, பொதுவுடைமைச் சமுதாயம் அமைவதைத் தான் கிருதயுகம் என்று கூறுகின்றான். பாரதி, சோவியத் புரட்சியை வரவேற்கின்றான்; பாராட்டுகின்றான்; சோவியத் புரட்சி, மாகாளி பராசக்தியின் கடைக்கண் அருளால் நிகழ்ந்ததென்கின்றான், கலிவீழ்ந்தால் கிருதயுகம் பிறப்பது