குறள் நூறு
355
16. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
இம்மைக்கும் மறுமைக்கும் துணையாய் அமையக் கூடியது ஒழுக்கம்; எனவே, எந்நிலையிலும் எப்பாடு பட்டேனும் அதனைக் காப்பாற்றிக் கொள்க.
பொருள்
உடைமைகள் தொடர்ந்து நலம் செய்யா. உயிரினைச் சார்ந்த ஒழுக்கமே இம்மையிற் புகழையும், மறுமையில் நிலையான இன்பத்தையும் தரும்.
17. ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
தம்மோடு வாழும் மனித குலத்திற்கு இசைந்தவாறு ஒழுகுதலே குடிமைப் பண்பு. அங்ஙனம் ஒழுகத் தவறுதல் மனிதப் பிறப்பில் இழிந்ததாகிவிடும்.
பொருள்
குடிமைப் பண்பு என்பது மக்களாட்சி முறையில் குடிமை இயல்பு என்று (citizenship) என்று குறிப்பிடப்படுகிறது. தம்மொடு வாழ்பவருடன் ஒத்திசைந்து வாழ்தலே குடிமைப்பண்பு.
18. அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவா தவன்.
மாற்றான் மனைவியின் பெண்மையை நாடாதவனே அறநெறி நின்று இல்லறம் வாழ்பவன் என்று பாராட்டப் பெறுவான்.