இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா! எத்தனையோ இயற்கை வனப்புமிக்க சூழ்நிலைகளை அமைத்துத் தந்தாய், நான் மகிழ்வோடு வாழ. ஆனால், மோசமான சில மனிதர்களையும் கூடவே படைத்தாயே ஏன்? இந்த மனிதக் கூட்டத்தில் வாழ்வது எளிதாக இல்லையே. ஆம்! வழுக்கலில்தானே காலூன்றும் பயற்சி கிடைக்கும். பொய்ம்மையில் தானே மெய்ம்மையின் தெளிவு தெரியும். வெயில் தானே நிழலின் அருமையைக் காட்டுகிறது.
இறைவா, இந்த மனிதர்களோடு சேர்ந்து அழிந்து போகாமல் காப்பாற்று. நான் உன் ஆணையை மீறவில்லை; அவர்களுடன் வாழ்கிறேன்! அவர்களுக்காகவும் வாழ்கிறேன். நான் எந்த மனிதரையும் அலட்சியப்படுத்த மாட்டேன்; என்னுடைய பகைவனையும் நான் மதிப்பேன்; அன்பு காட்டுவேன். மனிதகுலம் முழுவதும் என் சுற்றம் எனக் கொண்டு ஒழுகுவேன். இறைவா இங்ங்னம் வாழும் திறனை அருள்செய்க!