இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாள்வழிக் கவிதைகள்
207
பதறிப் பறந்தே ஓடிடுவர்; இக்கடையரிடமிருந்தும்
ஒதுங்குவர்:
கயவரொடு மறந்தும் பழகார்; நட்புரிமையும் கொள்ளார்
நல்லோரிடம் நனி சிறந்து பழகுக!
வாழும் வழி அறிவீரே!
அடுத்தவனைத் தூற்றியவன்
உன்னைத் தூற்றவும் செய்வான்! துணிக!