புரியாத புதிர்
297
மணி பத்து, பதினொன்று, பன்னிரண்டு - ஊஹூம்; பேச்சு ஓயவே இல்லை . பேசினோம், பேசினோம், பேசினோம், பேசிக் கொண்டே இருந்தோம்.
"இனி நாம் இருவரும் உடலும் உயிரும்போல!" என்றேன் நான்.
"இனி நாம் இருவரும் மலரும் மணமும் போல" என்றாள் அவள்.
"இனி நாம் இருவரும் நகமும் சதையும் போல" என்றேன் நான்.
"இனி நாம் இருவரும் நிலவும் ஒளியும்போல" என்றாள் அவள்.
இதை உணர்ந்தோ என்னமோ, அவள் எழுந்து சென்று, தன் தளிர்க்கரங்களில் பால் செம்பை ஏந்திக் கொண்டு வந்து எனக்கு எதிரே நின்றாள்.
நான் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "அமிர்தகலசம் ஏந்தி நிற்கும் அப்ஸர ஸ்திரீ போலவே இருக்கிறாயே!” என்றேன்.
அவள் தலையைக் கீழே கவிழ்த்திக் கொண்டு, "அந்த அமிர்தத்தைப் பருகப் போகும் அசல் தேவ புருஷனைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள்" என்றாள் அவள்.
நான் அவளுடைய தலையை நிமிர்த்திவிட்டுச் சிரித்தேன்- ஆம், அப்பொழுதுதான் நாங்கள் இருவரும் முதன் முறையாக மனம் விட்டுச் சிரித்தோம்.
அவள் மெள்ள நடந்து சென்று, விளக்கின் திரியை மெள்ள இறக்கிவிட்டு வந்தாள்.
வெளிச்சம் சற்றே குறைந்தது; எங்களைப் பிடித்திருந்த வெட்கமும் சற்றே மறைந்தது. இருவரும் ஒருவரையொருவர் நெருங்கினோம்...
"மற்றவர்களைப் போல் நாம் ஒருவரை ஒருவர் முன்பின் தெரியாமல் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே" என்றாள் அவள் பெருமிதத்துடன்.
“ஆம், நாம் ஒருவரை ஒருவர் முன்பின் தெரிந்தே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறோம்" என்றேன் நானும் பெருமிதத்துடன்.
அன்று இருந்த அந்த ஒற்றுமை இன்று....?
★★★