470
விந்தன் கதைகள்
இந்தப் புதிரை- ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவில்லையென்றால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு. ஒரு நாள் அவருடைய வீட்டு வேலைக்காரர்களில் ஒருவனை நெருங்கினான்; விஷயத்தை வினயத்தோடு தெரிவித்தான்.
அவனோ கடகடவென்று சிரித்து விட்டு, "அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?" என்று கேட்டான்.
'ஆமாம்' என்பதற்கு அடையளமாகத் தலையை ஆட்டினான் அருணாசலம்.
"சரி, தெரிந்துகொள் - பாங்கர் பஞ்சாபகேசனுக்கு அவர் பிள்ளையாய்ப் பிறந்தார்!"
"இவ்வளவுதானா அவர் செய்தது? என்றான் அவன் வியப்புடன்.
"ஆம் தம்பி, ஆம்; அந்த அதிசய மனிதர் செய்ததெல்லாம் அவ்வளவேதான்!"
"செய்தது சரி; செய்வது?" என்றான் அவன் மேலும் வியப்புடன்.
"இன்னொரு பாங்கரைப் பெற்றெடுக்கும் வேலை!"
"அதைத் தவிர வேறொரு வேலையும் செய்வதில்லையா, அவர்?"
"இல்லை; இல்லவே இல்லை!"
"அதிசயம்; அதிசயத்திலும் அதிசயம்!" என்று கை கொட்டிச் சிரித்தான் அருணாசலம்.
"சிரிதம்பி, சிரி கண்ணீருடன் சிரிப்பும் கலந்தால்தான் கவலை இன்னும் கொஞ்ச நாட்களாவது நம்மை இந்த உலகத்தில் வாழ விட்டு வைக்கும்!" என்றான் அவன், பெருமூச்சுடன்.