இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உன் கை
தொட்டதைத் துலங்கச் செய்யும் கை
என்பது எனக்குத் தெரியும்.
பாவங்களையும் விகாரங்களையும்
போர்த்தி வைத்திருக்கும்
என் புலால் உடம்பைத் தொடு;
புனிதமாக்கு.
இரும்பாக இருக்கும் என்னைப்
பொன்னாக்கு.
உப்புநீராக இருக்கும் என்னை
உண்ணும் நீராக்கு.
20
34