பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

உள்ளங் கரைய வுணர்வு கரைகடந்த
வெள்ள மெனக்கிளர்ந்து வெளியாக - வள்ளலுமென்
தொன்மைத்தாயீன்றளித்தா தோழர்காள் ளென்றழைத்தான்
உன்மத்தன் போலு முவந்து.

'சலிப்புடன் சற்றிரவில் சாய்ந்துகண் துஞ்சின்
அலைப்புரவி மீதூர்ந்த வாறே - மலைப்பக்
கனவிலும் வந்து களிப்பித்தீர்! காண
நனவிலும் வந்தீர், நயந்து!

பிரிந்தாலும் துன்பம்; பிரியாமல் மேலு
மிருந்தாலும் துன்ப மெனவே - சரிந்தாலும்
பாய்விரித்தும் பாங்காயப் பயணப் படாக்கலம்போல்
ஓய்வுகுத்தாங் குள்ள துளம்!

'அமைதி யளிக்கு மழகு மலைக்குன்றை
இமையாது நின்றிறுதி யாகச் - சுமையாய்
அரும்புங்கண் ணீர்சிதறி ஆர்வமுடன் கண்டு
விரும்பநான் கொள்வேன் விடை!

நீலக் கடல்மார்பில் நேச மகவென்னச்
சாலத் தவழும் தனிக்கப்பல் - மாலுமிகாள்!
பின்னேநான் வந்து பிறிதுமொரு மாலுமியாய்
முன்னாகி நிற்பன் முனைந்து.

மென்றுயில் கொள்ளும் விரிகடலே! மேவுமலைக்
குன்றுடைய வூற்றுக்குங் கூடநீ - யென்றும்
உரிமைகொண் டாடி வுரைகின்றா யுன்பால்
பெருமையுடன் சேர்குவன் பின்!

147