பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

காலையைக் காணக் காத்த கடுங்குளிர்க் கால மெல்லாம்
வேலையை விரும்பிக் காத்தோர், வேனிலின் வருகை கண்டு
மூலையில் அரும்பிக் காத்த முருகவிழ் முல்லை யொப்ப
மாலையைக் காணக் காத்தார், மனமலர் மணக்கு மாறே!

கதிரவன் கடுமை குன்றிக் கண்மறை காம ரந்தி,
சதுரிசை, பாடல், கூத்து, சாதுக்கள் கதைக ளாதி
விதரணை யாக வீடு வீதிகள் தோறும் காணும்!
எதிர்புதிர் கேலி, கிண்டல், எக்களிப் பிவைக ளூரில்!

குமரன் குறிப்பறிவுறுத்தல்



“குவளையே விழியாய்க் கோலக் கூன்பிறை நுதலாய், வாரிப்
பவளமே யிதழாய்க் கோத்த பனிமுல்லை பல்லாய்ப் பார்க்கத்

துவளும்மின் னிடையாய் வந்தோர் தோகையென் நெஞ்சில்
புக்காள்!

அவளைநான் வெளியேற் றாமல் அயர்கிறேன் வேணி”
யென்றான்,


வேணி விடையளித்தல்



வியப்புடன், “இதுமெய் யன்று; வேளென விளங்கி,வேட்கை
நயப்புடன் நங்கை நெஞ்சில் நாக முயன்றீர் நீரே!
பயப்படும் நங்கை, மாறாய்ப் பதுங்கினா ளுமது நெஞ்சில்!
கயப்புடன் கழற வேறோர் காரணம் காணோ” மென்றாள்,

ஆண்மகன் அவா அறிவித்தல்



“விசித்திர விளக்கம்; வேணி! விரும்பிக்கே ளிதையும்;
வேட்பாய்

வசித்திடும் மரத்தில், வாய்த்து வளர்ந்ததோர் கிளையில்
குந்திப்

பசித்தபைங் கிளி, தன் பக்கம் பழமொன்று பார்த்துக் கொத்திப்

புசித்திட முயன்றால் நேரும் பொல்லாங்குண் டோசொல்”
லென்றான்