இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
குன்றமும் குடிலும் ஆவின்
கொட்டிலும் திரையும் மானின் கன்றெனும் பிறவாச் சேயும்
காலமும் தானு மாக ஒன்றவன் நினைவே தாங்கி ஒருத்தியே உறவு மாகி என்றுமவ் வழிமேல் வைத்த
இருவிழி உலவி வந்தாள்! 8
பணிவிழி பளிங்குக் கன்னம்
பவளவாய் எயிற்று முல்லை குனிநுதல் பின்னக் கூந்தல்
குதலைவாய் மடுத்த காது கனிவுளம் மெலிந்த செங்கைக்
கன்னி மான் புதினிக் குன்றத் தனிநெடும் பாதை யோடித்
தவிக்குநெஞ் சிக்ளக்க வாழ்ந்தாள்! 9
எவ்வொரு நினைவு மின்றி . - இளங்கொடி அவன்மேல் வைத்த
அவ்வொரு நினைவால் காலை
அலர்ந்தது. முதல்தொ டங்கி ஒவ்வொரு நொடியும் நாளும்
உலவினுள்; அவன்பொ ருட்டே செவ்வையாய் உடலைக் காக்கும்
எண்ணமும் சிறிது கொண்டாள்! IG