பாவியக்கொத்து
பாலிருந்தது; பழமிருந்தது; அழுதாள்:-உள்ளப் பதைப்பிருந்தது; வாய் திறந்து அழுதாள்!
சேலிருந்தன போலிருந்தன விழிசள்-தன்குச்
சிவந்திருந்தன: மேலும் மேலும் அழுதாள்!
ஆலிருந்தது போலிருந்தது என்தோள்-முகத்தை
அதிற்புதைக்க வழியிருந்தது; அழுதாள்!
காலிருந்தது தலையிருந்தது அதன்மேல்-அவள்
கண்கள் வடித்த நீர்வழிந்தது; அழுதாள்!
(வேறு)
களிப்பாளென் றெதிர்பார்த்தேன்; காணேன் இன்பக்
காதலெனும் உணர்வுவெள்ளத் தவளும் வந்து, 220 குளிப்பாளென் றெதிர்பார்த்தேன்; குறியுங்காணேன்.
கூடலுக்கு முன் ஊடல் காட்டி, முத்தம் அளிப்பாளென் றெதிர்பார்த்தேன்; அதுவுங் காணேன்
அருகுநுனி விளக்கொளிக்கும் உடலைக் காட்டா தொளிப்பாளென் றெதிர்பார்த்தேன்; ஒன்றுங்காணேன்: ஒசிந்துவிட்ட மலர்க்கொடியாய்க் கால்வீழ்ந்தாளே!
வித்திடுவாள் வாழ்வுக்கென் றிருந்தேன், காணேன்;
விலக்குகின்ற கைவிலக்கி முகத்தைக் கையால், பொத்திடுவாள் என்றிருந்தேன். பொத்தக் காணேன்;
பொருதோளிற் பசுங்கிளியாய்த் தாவி வந்து 230 தொத்திடுவாள் என்றிருந்தேன்! தொத்தக் காணேன்! தொலைவறியாப் பேரின்பங் காட்டிக் காட்டி ஒத்திடுவாள் குளிர் முகத்தை என்றி ருந்தேன்!
ஒடிந்துவிழும் மலர்க்கொடியாய் அடிவீழ்ந் தாளே,