அஞ்செழுத்து
யன்றே'(சீவக.1:223)
'நன்முற நின்மக னாம்நறு
மாலைகள் அன்னவ னால்அம
ரப்படும் தேவியர் நன்முளை
நின்மகன் ஆக்கம் அதாம்:எனப்
பின்னத னால்பயன் பேசலன்
விட்டான்'(சீவக.1:225)
(ஈ) அசோகு சாய்தல் Acoku
caytal (the Acoku tree falling)
தீமை,துன்பம் -evil,sorrow
'சீர்மலி அசோகு தன்கீழ் இருந்த
நம்தேவர் மேலே வேரொடு
சாய்ந்து வீழக் கண்டனம்'
(பெரிய.28.637)
அஞ்செழுத்து Anceluttu (five letters)
(1) துன்பம் களைதல்,பாகுபாடின்மை
-remove affliction,indiscriminate
'நல்லவர் தீயவர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்து
காட்டுவ கொல்ல நமன்தமர்
கொண்டு போமிடத்து அல்லல்
கெடுப்பன அஞ்செழுத்துமே'
(திருஞான.தேவா.551)
(2) மந்திரம் -holy chant
'.. .. .. அரன் அஞ்செழுத்தும்
உணரா அறிவிலோர்' (பெரிய.1:
5.159)
(3) சிறப்பு -excellence
'ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் '
(பெரிய.16:10)
(4) புகழ் -fame
'பன்னும் பெருமை அஞ்செழுத்தும்'
(பெரிய.16:12)
அட்ட புட்பம் Attaputpam (five
flowers)
(1) வழிபாடு, பண்புநலன் - worship,
virtue
'அட்ட புட்பம் அவை கொளுமாறு
கொண்டு அட்ட மூர்த்தி அனாதி
தன்பாலணைந்து அட்டுமாறு
'செய்கிற்ப அதிகை வீரட்டனார்
அடிசேரும் அவர்களே'
(திருநா.தேவா.155)
அட்டமி நாள் Attami nal (eighth day
of waning moon)
(1) சிறப்பு -special
அடி
'பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ
பூம்பாவாய்'
(திருஞான.தேவா.3583:3-4)
அடி Ati (foot)
(1) அருள் / ஆதாரம் - grace/basis
'சாவா மரபின் அமர்க்காச்
சென்ற - .. .. .. நின் அடி தலை
உற வணங்கினேம்' (பரி.2:71-74)
(2) உய்தி / உய்வு - redemption
'மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல்
சேவடி'(பரி .3:2)
(3) அடைக்கலம் - refuge
'நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு
அருமையின் நின்அடி உள்ளி
வந்தனென்' (திருமுரு.278-279)
(4) மாட்சி / மாண்பு,இறைமை -
glorious/dignity,divinity
'மலர்மிசை ஏகினான் மாணடி
சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்'
(குறள்.3)
(5) பாதுகாப்பு, ஆதாரம் -
protection, basic
'குடி தழீஇக் கோல்ஓச்சும் மாநில
மன்னன் அடி தழீஇ நிற்கும்
உலகு'(குறள்.544)
(ஆ) அடிசேர்தல் Aticertal (reach
the feet)
(6) அடைக்கலம் - refuge
'இடு துனி கை ஆறா என், துயர்
கூரச் சுடும் , இறை: ஆற்றிசின்,
அடிசேர்ந்து! சாற்றுமின்'
(பரி. 8:78-79)
(7) பணிவு - humility
'மாண மறந்து உள்ளா நாணிலிக்கு
இப்போர் புறம் சாய்ந்து
காண்டைப்பாய் - நெஞ்சே!
உறழ்ந்து இவனைப் பொய்ப்ப
விடேஎம் என நெருங்கின்,
தப்பினேன் என்று அடி சார்தலும்
உண்டு!' (கலி. 89:12-15)
(8) தாபரமாகக் கொள்ளுதல் -
shelter
வேண்டுதல் வேண்டாமை
இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல' (குறள்.4)