528
திருக்குறள்
1323. புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து.
என்பது இதுவுமது
நிலத்துடனே நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலரிடத்திலே, பிணங்குகிறது போல நமக்கு இன்பந் தருவதொரு தேவலோகம் உண்டோ? இல்லை என்றவாறு. ௩
1324. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
னுள்ள முடைக்கும் படை
என்பது. ‘அப்புலவி இனி எதனால் நீங்கும்?’ என்றதோழிக்குத் தலைமகள் கூறியது:
காதலரைப் புல்லிக்கொண்டு பின்விடாமைக்கு ஏதுவாகிய அப்பிணக்கினிடத்திலே யுண்டாம், என்மனத்தைக் கெடுக்கும் ஆயுதம் என்றவாறு. ௪
1325. தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன் றுடைத்து
என்பது, தலைமகன்* தன்னுள்ளே சொல்லியது;
புருஷர் தம்மிடத்திலே தப்பில்லா விட்டாலும் தப்புஉள்ளவர்கள் போலே பிணங்கப்பட்டுத் தாம்விரும்பிய ஸ்திரீகளுடைய தோள்களைக் கூடப்பெறாமல் வருந்துகிறபோதும், அவருக்கு அத்தன்மையதோரின்பம் பயத்தலுடையது என்றவாறு. ௫
1326. உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது
என்பது இதுவுமது
சீவன்களுக்கு மேல் உண்கிறதிலும் முன்உண்டு செரிக்கிறதே சுகமாவது போலக் காமத்துக்குமேல் புணருகிறதிலும் பிணங்கி
- தலைமகளை யூடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையாய்-என்பது
பரிமேலழகர் துறைக்குறிப்பு