தமிழ் நாடக வரலாறு 2. இந்த முதன்மையை எண்ணித்தான் நமது முன் ைேர்கள் தமிழுக்கு இலக்கணம் கண்டபோதே நாடகத் தைத் தமிழிலிருந்து வேறுபடுத்த முடியாதபடி "இயலிசை நாடக மெனுந் தமிழ் என மொழியோடு காடகத்தையும் இணைத்திருக்கிருர்கள். ஒளவைப் பிராட் 'டியார் பாடுகிருர்: பால், தேன், பாகு, பருப்பு இவை கான்கையும் நான் உனக்குத் தருகிறேன்; இயல், இசை, காடகம் ஆகிய மூன்று தமிழையும் நீ எனக்குக் கொடு” என்று இறைவனை வேண்டுகிறர். "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா.’ இவ்வாறு பாடுகிருர் ஒளவையார். எனவே நாடகம் தமிழ் மொழியோடு இணைந்துவிட்ட ஒரு கற்கலை. தமிழ் என்று சொலலும்போதே அது இயல், இசை, காடகம் ஆகிய மூன்று கலைப் பகுதிகளையும் உள்ளடக்கி கிற்கின்றது. இப்படிப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளாக மொழியை வேறு யாரும் வகுத்ததில்லை. இது நமது தமிழ் மொழிககே உரிய தனிச் சிறப்பு. இந்தத் தனிச் சிறப்பால் காடகத்தை வாழ்வோடு ஒட்டிய கலையாகத் தமிழர்கள் போறறி வளர்த்து வந்திருக்கிருர்கள் என்பது கன்கு தெரிகிறது. காடக இலக்கணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறப்படும் தமிழ் நூல்களில் முறுவல், சபக்தம், செக்
பக்கம்:நாடகக் கலை 1.pdf/24
Appearance