275
ஆளையா! உனக்கு அமைந்தன
மாருதம் மறைந்த
பூளையாயின் கண்டனை;
இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன்
நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசலை
நாடுடை வள்ளல்.
இராவணன், படை அழிய, அனைத்தும் இழந்து தனியனாய் நின்றபோது) தான் வலியிழந்த நிலையில் இருப்பதையறிந்து வெட்கினான். கருணையால் அயோத்தி நாட்டுத் தலைவன் ‘இன்று போய் நாளை வா’ என்றது வேதனையைத் தந்தது.
***
ஆள் ஐயா - அரக்கரை ஆளும் ஐயா! உனக்கு அமைந்தன - உனக்குத் துணையாக அமைந்த படைகளும்; தேரும் பிறவும்; மாருதம் மறைந்த பூளையாயின-காற்றினால் வாரி எறியப்பட்ட பூளைப் பூண்டுகள்போல் ஆயின; கண்டனை - கண்டாய் அன்றோ! (ஆதலால்) இன்று போய் நாளை போர்க்கு வா - இன்று திரும்பிப் போய் நாளை உனது படை முதலியவற்றுடனே போருக்கு வா; என - என்று; நல்கினான் - உயிர் அளித்து விடை கொடுத்தான்; நாகு இளங்கமுகின் - மிக இளம் கமுகின் மீது; வாளை - வாளை மீன்; தாவுறு - துள்ளிப்பாய்கிற; கோசலை நாடுடை வள்ளல் - கோசல நாடுடைய வள்ளலாகிய இராமன்.
***
வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்