செந்தூர் நின்று சீரெலாம் திரட்டிச்
சொந்தமாக் கொண்ட சுப்பிர மணியன்
மகளாப் பிறந்து மாண்பெலாம் கொண்ட
மகராசி என்னும் வள்ளியம்மையை
நன்மனை யறங்களை நன்கு வளர்த்திட
முன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்.
வளனார் அந்தகர் மருவியான் மணந்ததும்
அளகையூர் அடைந்ததும் அதன்பின் நிகழ்ந்ததும்
முடிமன் மைத்து என் முத்து சுவாமி
விளம்பிய * சரிதையுள் விரிவாக் காணலாம்
உதவியைக் கூறல் உயர் செயல் என்றும்,
இதமுடை யவர்குணம் இயம்பல்நன் றென்றும்
முன்னோர் உரைத்ததால் மொழிவேன் அவள் குணம்
பின்னோர் அவற்றைப் பேணுதற் பொருட்டே.
எனதொரு வடிவமும் எனக்கு.று தொண்டுமே
கனவினும் நனவினும் கண்டவள் நின்றனள்.
என்னைப் பெற்றோர் என்னொடு பிறந்தோர்
என்னை நட்டோர் யாவருந் தன்னுடை
உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த
செயிரிலா மனத்தள் : தெய்வமே யனையள்
வள்ளுவர் குறளை வளனுறப் படித்துக்
கொள்ளும் விதத்தில் கூறுவள் உரையுடன்.
சரிதை' வள்ளியம்மை சரித்திரம்' என்னும் நூல்.
29
29