களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/பிற்சேர்க்கை - 2

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை -2

(இப்பகுதியை மயிலை சீனி.வேங்கடசாமியவர்கள் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. எனினும் வாசகர்கட்குப் பயன்படும் பொருட்டு நாங்கள் இப்பதிப்பில் சேர்த்துள்ளோம்- விடியல்)

வேள்விக்குடிச் சாசனம் (தமிழ்ப் பகுதி)

[1]

கொல்யானை பலவோட்டிக் கூடாமள்ளர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராஜனால்
நாகமா மலர்ச்சோலை நனிர்சினை மிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்களாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத
கொற்கைகிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்
கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்பு நின்று வேள்விகுடியென் றப்பதியைச்
சீரோடு திருவளரச் செய்தார்வேத்த எப்பொழுதே
நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின்
னளவரிய ஆதிராஜரை யகல நீக்கி யகலிடத்தைக்
களப்ரனென்றும் கலியரைசன் கைக்கொண்டதனை யிறக்கிய பின்
படுகடன் முளைத்த பருதிபோல பாண்டியாதிராஜன் வெனிற்பட்டு
விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவுங் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பாலுரிமை திறவிதி னீக்கித்
தன்பாலுரிமை நன்கன மமைத்த
மானம் பேர்த்த தானை வேந்தன்
னொடுங்கா மன்ன ரொளிதக ரழித்த
கடுங்கோ ளென்னுங் கதிர்வேற் றென்னன்;
மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி
மலர்மங்கை ஒடு மணனயர்ந்த
அற்றமி லடர்வேற்றானை ஆதிராஜன் அவனிசூளாமணி
எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்ம்மன்; மற்றவற்கு

.

மருவினிய வொருமகனாகி மண்மகனை மறுக்கடித்து
விக்ரமத்தின் வெனிற்பட்டு விலங்கல் வெல்பொறி

வேந்தர் வேந்தன் 30

சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் '

செங்கோற்சேந்தன்;

மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி
உதயகிரி மத்ய மத் துதுசுடர்போலத்
தெற்றென்று திசை நடுங்க மற்றவன் வெனிற்பட்டுச்
சூழியாளை செலவுத்திப் பாழிவா யமர் கடந்து
வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்
விரவிவத் தடையாத பரவரைப் பாழ்படுத்தும்
அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும் :
கைந்தலத்த களிறுத்திச் செந்நிலத்துச் செருவென்றும்
பாரளவுத் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும்
உரிமைச் சுற்றமோ டவர்யாளையும் 40
புரிசைம்மதிற் புலியூர்ப்
பகல் நாழிகை யிறவாமை இகலாழியுள் வென்று கொண்டும்
வேலாழியும் வியன்பறம்பு மேலாமைசென் றெறிந்தழித்தும்
ஹிரண்யகர்ப்ப முந் துலாபார முந் தரணிமிசைப் பலசெய்தும்
அந்தணர்க்கு மசக்தர்க்கும் வந்தணைகஎன் றீத்தளித்த
மகரிகையணி மணிநெடுமுடி
அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்ம்மன்;
மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேத்திப்
பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித்
தாய்வேளை யகப்பட ஏயெள்ளாமை பெறித்தழித்துச் 50
செங்கொடியும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக்
கொங்கலரு தறும்பொழில்வாய்க் குயிலோடு மயிலகவும்
மங்கலபுரமெனு மகாதகருண் மகாரதரையெறிந்தழித்து
அறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச்
சிலையும் புலியுங் கயலுஞ் சென்று
நிலையமை நெடுவரை யிடவயிற் கிடா அய்
மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோற்
றென்ன வானவன் செம்பியன் சோழன்
மன்னர் மன்னன் மதுரகரு நாடகன்
கொன்னலின்ற நெடுஞ்சுடர் வேற் கொங்கர்கோமான் கோச்சடையன்; 60
மற்றவற்குப் புத்ரளாய் மண்மகளது பொருட்டாக
மத்தயானை செலவுத்தி மானவேல் வலனேந்திக்
கடுவிசையா லெதிர்ந்தவரை தெடுவயல்வாய் நிகரழித்துக்
கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து
மன்னிகுறிச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து
மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப்

பூவலூர்ப் புறங்கண்டும்
கொடும்புரிதை நெடுங்கிடங்கிற் கொடும்பாளூர்க்கூடார் (தம்)
கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும்
செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட் டேசழிய
எண்ணிறந்த மால்களிறு மிவுளிகளும் பலகவர்ந்தும்
தரியலராய்த் தறித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்
பூலிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்
டழகமைந்த வார்சிலையின் மழகொங்க மடிப்படுத்தும்
ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப்
பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப்
பசுபதியது பதுமபாதம் பணிந்தேத்திக்
கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுத்திட்டுங்
கொங்கர்வன் தறுங்கண்ணிக் கங்கராஜனொடு சம்பந்தஞ்செய்தும் எண்ணிறத்தன கோசகசிரமும் இரணியகர்ப்பமுந் துலாபாரமும் 80
மண்ணின் மிசைப் பலசெய்து மறைதாவினோர் குறைதீர்த்துங் கூடல்வஞ்சி கோழியென்லு மாடமா மதில் புதுக்கியும்
அறைகடல் வளாகங் குறையா தாண்ட
மன்னர் மன்னன் றென்னவர் மருகன்
மான வெண்குடை மான்றேர் மாறன்;
மற்றவற்குமகனாகி மாலுருவின் வெளிர்ப்பட்டுக் கொற்றமுன்றுடனியம்பக் குணீர்வெண்குடை மண்காப்ப பூ
மகளும் புலமகளு நாமகளு நலனேத்தக்
கலியரைசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து
கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து
நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்
கருதாதுவத் தெதிர்மலைந்த காடவனைக் காடடையப்
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல்
தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும்
தீவா யயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த
ஆய்வேளையுங் குறும்பரையு மடலமரு ளழித்தோட்டிக்
காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குதும்பிற் செருவென்றும்
அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய சி
லைமலி தடக்கைத் தென்ன வானவன்
அவனே, 100
சிரீவரன் சிரீமனோகரன் சினச்சோழன் புனப்பூமியின்
வீதகன் மஷன் விநயலிச்ருதன் விக்ரமபாரகள் வீரபுரோகன்
மருத்பலன் மான்பசாசனன் மதுபமன் மர்த்திதவீரன்
கிரிஸ்திரன் திகிந்தரன் கிரிபாலயன் கிருதாபதாவன் கலிப்பகை கண்டகதிஷ்டூரன் கார்யதவன் கார்முகபார்த்தன் பராந்தகன் பண்டிதவத்ஸலன் பரிபூர்ண்ணன் பாபபீரு
குரையுறுகடற் படைத்தானைக் குணக்ராஷ்யன் கூடந்ருணயன்

நிறையுறுமலர் மணிநீண்முடி தேரியர்கோன் னெடுஞ்சடையன்; மற்றவன்றன் ராஜ்யவற்சரம் மூன்றாவது செலாநிற்ப;
ஆங்கொருதாண்
மாடமா மதிற்கூடற் பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக்
கொற்றவனே மற்றவரைத் தெற்றென நன்குகூவி
என்னேறுங் குறையென்று முன்னாகப் பணித்தருள
மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை
மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது
ஆள்வதானை யடல்வேந்தே வேள்விகுடியென்றும் பெயருடையது
ஒல்காத வேற்றானையொ டோதவேலி யுடன் காத்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்றும் பரமேச்வரனால்
வேள்விகுடி யென்னப்பட்டது கேள்வியிற் றரப்பட்டதனைத்
துளக்கமில்லாக் கடற்றானையாய் களப்ரரா லிறக்கப்பட்டது 120
என்று தின்றவன் விக்ஞாப்பஞ்செய்ய, நன்றுநன்றென்று முறுவலித்து நாட்டானின் பழமையாதய் காட்டித் கொள்கவென்ன
நாட்டற்றான் பழமையாதல் காட்டினானங் கப்பொழுதே
காட்டமேனா ளெங்குரவராற் பான்முறையிற் றரப்பட்டதை
எம்மாலுந் தரப்பட்டதென்று செம்மாந்தவ னெடுத்தருளி
விற்கைத்தடக்கை விறல் வேந்தன் கொற்கை கிழான்
காமக்காணி நற்சிங்கற்குத்
தேரோடுங் கடற்றானையான் நீரோடட்டிக் கொடுத்தமையின்; மற்றிதற்குப் பெருநாள் கெல்லை தெற்றென விரித்துரைப்பிற்-
புகரறு பொழின் மருங்குடுத்த நகரூரெல்லைக்கு மேற்கும்; 130
மற்றிதற்குத் தென் எல்லை குளந்தைவங்கூழ் வத்தெசைக்குங்
களந்தைக் குளத்தி லாலுக்கு வடக்கும்;
மற்றிதற்கு மேலெல்லை
அற்றமில்லாக் கொற்றன் புத்தூரொடு
மையிருப்பைச் செய்யிடை மேற்றலைப் பெருப்பிற்குக் கிழக்கும்;
மற்றிதற்கு வடபாலெல்லை
காயலுட், கமலமலரும்ம பாயலுள் வடபாலைப் பெருப்பிற்குத் தெற்கும்;
இவ்வியைத்த பெருநான் கெல்லையிற்
பட்டபூமி காராண்மை மீயாட்சி யுள்ளடங்க
மேலென் குரவராற் கொடுக்கப்பட்ட பரிசே
யெம்மாலும் கொடுக்கப்பட்டது;
மற்றிதற் காணத்தி குற்றமின்றிக் கூறுங்காலைக்
கொங்கர்வன் நறுங்கண்ணிக் கங்கராசனது கந்யாரத்தம்
கொங்கர் கோற்குக் கொணர்ந்து கொடுப்ப
ஆர்ப்பறா வடற்றானைப் பூர்வராசர் புகன்றெழுந்து
வில்லிரவுங் கடற்றானை வல்லபனை வெண்பைவாய்
ஆளமரு வழிந்தோட வாளமரு ளுடன்வவ்விய
ஏனப்பொறி யிகலமரு ளிடியுருமென வலனேந்த

மலைத்ததானை மதவிலகள் மன்னர்கோ னருனிற் பெற்றும் கோல்வனைக்கும் வேற்றானைப் 150
பல பல்வளைக்கோள் கொணரப்பட்டுப்
பொரவந்தவர் மதந்தவிர்க்கும்
கரவந்தபுரத்தவர் குலத்தோன்றல்
மாவேந்தும் கடற்றானை மூவேந்தமங்கலப் பேரரையனாகிய வைத்யசிகாமணி மாறங்காரி
இப்பிரம தேயம் உடைய
கொற்கைகிழான் காமக்காணி கவரஞ்சிங்கன்
இதனுள் மூன்றிலொன்றும் தனக்குவைத்
திரண்டுகூறும் ஐம்பதின்மர் பிராமணர்க்கு
நீரோடட்டிக் கொடுத்தான்; இதனுள் 160
மூர்த்தி எயினன் சவையோ டொத்தது
நான்கரை படாகாரம் உடையன்; இதனுள்
தனக்குவைத்த ஒரு கூற்றிலுத்தம்பிமார்க்கு நான்குந்தஞ்
சிற்றப்பனார் மக்களுக்கு ஆறும்
சபையோ டொத்த படாகாரங் கொடுத்தான்;
இப்பிரசஸ்தி பாடின சேனாபதி ஏனாதி ஆயின
சாத்தஞ்சாத்தற்கு மூன்று கூற்றாருமாய்த்
தங்களோ டொத்த நான்கு படாகாரங் கொடுத்தார்;
மற்றிதனைக் காத்தார் மலரடியென் முடிமேல் என்று
கொற்றவனே பணித்தருளித் 170
தெற்றெனத் தாம்ர சாசனஞ் செய்வித்தான்;
இஃதெழுதின சுத்தகேசரிப் பெரும்பணைக் காரனுக்கு
பெருமக்கள் அருளாற் பெற்றது ஒரு இல்லவளாவும்
இரண்டுமாச் செய்யும் ஒரு புஞ்சையும் பெற்றான்:
இவை யுத்தகேசரிப் பெரும்பணைகாரன் எழுத்து. 175

✽✽✽


  1. சாசனத்தில் தமிழில் அமைந்துள்ள பகுதி மட்டும் இங்கே தரப்படுகிறது. அடிக்கோடிட்ட சொற்கள் மூலத்தில் கிரந்த எழுத்துக்களில் அமைந்துள்ளன. கழக வெளியீடான (1967) பாண்டியர் செப்பேடுகள் பத்து நூலில் உள்ளவாறு இங்கு சாசனம் அச்சிடப்பட்டுள்ளது. முதல் 16 வரிகள் வரை கலிப்பகை என்னும் சொல் தவிர மற்ற அனைத்தும் வட எழுத்துக்களால் அமைத்துள்ளன. 47ம் வரியும் அவ்வாறே வட எழுத்துக்களால் அமைத்துள்ளது.