களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக






களப்பிரர் ஆட்சியில்

தமிழகம்

 

ஆராய்ச்சி அறிஞர்

மயிலை சீனி வேங்கடசாமி

 

விடியல் பதிப்பகம்

கோவை- 15




நூல் பெயர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
நூல் வகை ஆய்வு
ஆசிரியர் மயிலை சீனி வேங்கடசாமி
முதற்பதிப்பு மக்கள் வெளியீடு 1975
விரிவாக்கப்பட்ட
முதற்பதிப்பு
டிசம்பர் 2000
பக்கங்கள் 168
வெளியீடு விடியல் பதிப்பகம்
11, பெரியார்நகர்
மசக்காளிப்பாளையம் வடக்கு
கோவை - 611 015.
தொலைபேசி எண்: 0122 - 576772
ஒளியச்சுக்கோவை விடியல்
கோவை - 641 015
அச்சாக்கம் மணி ஆப்செட்
சென்னை -5
அட்டை அச்சாக்கம் பிரிண்ட் ஸ்பெஷாலிடீஸ்
விலை ரூ.50

பதிப்புரை

றிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி (1900-1980) அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்நேரத்தில் அவரது மிகச் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகிய 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். களப்பிரர் காலத்தை ‘இருண்ட காலம்' எனத் தமிழ் ஆய்வுலகம் வரையறுத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அக் கருத்தை மறுத்து எழுதப்பட்டது இந்நூல். கிடைக்கும் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கிய காலகட்டம் அது என மயிலை சீனி இந்நூலில் நிறுவுகிறார். இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் களப்பிரர் காலம் குறித்த நமது புரிதல் அதிகரிக்கத்தக்க அளவிற்கு தமிழக வரலாறு குறித்த பல புதிய ஆய்வுகள் வெளி வந்துள்ளன. அவற்றை எல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு மயிலை சீனி அவர்களது நூலில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகட்கு விடைகான முயலும் பேரா.அ.மார்க்ஸ் அவர்களது விரிவான ஆய்வுரை ஒன்றையும் இப்பதிப்பில் இணைத்துள்ளோம். தமிழகத்தில் விவசாயச் சமூகம் உருப்பெற்றபோது எழுத்த முரண்களின் பின்னணியில் களப்பிரர் காலத்தை விளக்க முயலுகிறார் மார்க்ஸ். களப்பிரர் காலம் குறித்த மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகக் கருதப்படுவது வேள்விக்குடிச் சாசனம். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கனைக் களப்பிரர்கள் நீக்கினார்கள் என்கிற கருத்தை மயிலை சீனி அவர்கள் ஏற்காததன் விளைவாகவோ எள்ளவோ முதற்பதிப்பின் பின்னிணைப்புகளில் ஒன்றாக அதனை அவர் சேர்க்கவில்லை. எனினும் அதன் முக்கியத்துவம் கருதி இப்பதிப்பில் வேள்விக்குடிச் சாசனத்தையும் பிற் சேர்க்கையாகச் சேர்த்துள்ளோம். மொத்தத்தில் களப்பிரர் காலம் குறித்த பல முக்கியத் தகவல்களையும் தரவுகளையும் உள்ளடக்கியதாக இந்நூலை உங்கள் முன் அவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

- விடியல்

உள்ளுறை

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
தோற்றுவாய் 11
களப்பிரர் யார்? 13
களப்பிரர் எப்போது வந்தனர்? 16
சில களப்பிர அரசர்கள் 17
களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர் 24
களப்பிரர் காலத்து இலங்கை அரசர் 31
இலங்கையில் பாண்டியர் ஆட்சி 36
களப்பிரர் காலத்து இருக்குவேள் அரசர் 47
களப்பிரரின் வீழ்ச்சி 51
களப்பிரர் ஆட்சியில் சமயங்கள் 55
களப்பிரரும் பிராமணரும் 55
ஜைன சமய வளர்ச்சி 56
பௌத்த சமய வளர்ச்சி 58
வைணவ சமயம் 66
சைவ சமயம் 67
பக்தி இயக்கம் 68
களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி 70
களப்பிரர் காலத்தில் நுண்கலைகள் 95
இணைப்புகள்
1 களப்பிரர் பற்றிய வாழ்த்துப்பாக்கள் 99
2 வச்சிரநந்தியின் திரமிள சங்கம் 107
3 இறையனார் அகப்பொருள் - வரலாற்று ஆய்வு 117
4 நக்கீரர் காலம் 129
நூலடைவு 132

பிற்சேர்க்கைகள்

1. அறிஞர் மயிலைசீனி. வேங்கடசாமி அவர்களின் "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்": ஒரு பார்வை. அ. மார்க்ஸ் 135
2. வேள்விக்குடி சாசனம் 158
3. அறிஞர் மயிலைசீனி. வெங்கடசாமியின் நூல்கள் 163
4. கட்டுரைகள் 164