இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 27
28 மழையே ஓடி வா!
பிழைக்கும் உயிர்கள் மகிழவும்,
பூண்டு புற்கள் துளிர்க்கவும்,
அழைக்கின் றேனே உன்னையே
அருள் மழையே ஓடி வா!
வறண்ட ஏரி ஆறெல்லாம்
வழிய, வானி லிருந்துகீழ்
இறங்கி வந்து தேங்கிட
இன்ப மழையே ஓடி வா!
பயிர் விளைந்து குவியவும்,
பாரில் ஒழுங்கு நிலைக்கவும்,
உயிர்கள் தோன்றி வாழவும்
உதவும் மழையே ஓடி வா!
மழையே மழையே ஓடி வா!
மக்கள் இன்பம் நாடி வா!
உழைக்கும் உழவர்க் குதவ வா!
உலகம் செழிக்க ஓடி வா!
-1969