இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி
கல்வி பயில்வதற்குக் காத்திருந்தோம்; நின்னையொரு
செல்வி மணந்துவக்குஞ் சீர்காணப் பார்த்திருந்தோம்!
பல்வகையா எண்ணிப் பயன்கிடைக்கும் வேளையிலே
சொல்வதின்றிச் சென்றதெங்கு? சொல்!
8
உன்னைப் பிரிந்த உடன்பிறப்பின், தந்தையரின்,
அன்னையின் துன்பத்தை ஆரளப்பார்? - பின்னைப்போல்
நீர்க்குள் முழுகையிலுன் நெஞ்சம் நினைத்திருந்தால்
ஆர்க்கும் உயிர்ப்போமோ அன்று?
9
தந்தைக்கு நின்றுதவித் தாய்க்குத் தலைநின்று
முந்தைத் தமிழ்க்குழைத்த மொய்ம்போனே! - சிந்தையெல்லாம்
செங்குருதி கொப்பளிக்கச் சென்றனையால்! ஈங்கவர்க்கே
எங்குறுதி சொல்வோம் இனி?
10
-1976