இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 235
நெருப்பின் நினைவு’களும் ‘நெஞ்சின் நிழல’ சைவும்
நெற்று மணிஎனும்நற் பாடல்கள்! - ஒரு
நிலைத்த தமிழினத்தின் தேடல்கள்! - தமிழ்
விருப்பு மிகவும், இனம் ஏற்ற முறவும் - நிலம்
விடுதலை பெறவும்துணை நின்றிடும்! - இடை
வீழ்ச்சி யின்றிப் பகை வென்றிடும்!
-1986
202
வாழ்க நன்றே!
இருபதின் ஐந்தாம் ஆண்டில்
எடுத்தடி வைத்தி ருக்கும்
திருவளர் கவிதை என்னும்
தீந்தமிழ்ப் பாடல் ஏடும்
குருமகன் தெசிணி தாமும்
கூம்புத லின்றி யாண்டும்
மருவுக வளங்கள் ஆக்கம்
மண்டுக! வாழ்க நன்றே!
1986