பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம், ஆறன் மருங்கின் ஈறு மெய்யொழியச் செடும் என்னாது குற்றியலுகம் என்றே தினமையான், நெடுமுதல் குறுகாதே நின்று ஆரகாம் என்றும் ஆம். இன்னும் அதனானே "ஆராகுவதே” ( சொல்லதிகாரம் - வேற்றுமையியல் - சூத்திரம் கவு.) என்றாற் போலப் பொருட்பெயர்க்கண் வரு முடியும் கொள்க. மேல் மாட்டேற்றானே எண்ணாயிரம் என முடிந்தது. சஎய, ஒன்பா னிறுதி யுருபு சிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. . இதுவும் அது. இ-ள்:--ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மரபு இன்பெறல் வேண் இம் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதிக் குற்றியலுகரம் தன் வடிவு நிலை திரிந்து கெடாது சாரியையாகிய மாபினையுடைய இன்பெற்று முடிதல் வேண்டும். உ-ம்:-ஒன்பதினாயிரம் என வரும். உருபு என்றும், நிலை என்றும், சாரியை மரபு என்றும் கூறிய மிகுதியான், ஆயிர மல்லாத பிற எண்ணின் சண்னும் பொருட்பெயரிடத்தும், இன்னும் 2.காமும் வல்லெ முத்தும் பெற்று முடியும் முடிபும் கொள்க. ஒன்பதிற்றுக்கோடி, ஒன்பதிற்றொன்று, ஒன்பதிற்றுத்தடக்கை, ஒன்பதிற்றெ முத்து என வரும். இன்னும் அவ்விலேசானே, மேல் எண்ணாயிரம் என்ற வழி ஏற்றிரட்டுக் கொள்க. (ஏகாரம் ஈற்றசை.) சாக. நூறா யிரமுன் வரூஉங் காலை அற னியற்கை முதனிலைக் கிளவி. இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு ஏறு என்னும் அடையடுத்து ஆயிரம் என்பது முடியுமாறு கூறுகின்றது. இ-ள்:- நூறாயிரம் முன் வரு காலை முதல் நிலக்கிளவி ஈறு என் இயற்கை - அயரம் என்னும் அடையடித்த மொழி (ஒன்று முதல் ஒன்பான்கள்) முன்வரும் காலத்து முதனிலைக்கிளவியாகிய ஒன்று என்னும் எண் (மேல் ஒன்று முதல் ஒன்பான் சனோடு முடிந்த) நூறு என்னும் சொல் அவ்வொன் றனோடு முடிந்த விகார இயற்கை எய்தி முடியும், வழிநிலைக்கிளவியாகிய இரண்டு முதல் என்கன் விகாரம் எய்தியும் எய்தாதும் இயல்பாயும் முடியும். உ-ம்:-- ஒரு நூறாயிரம் என வரும். இரு நூறாயிரம், இரண்டு நூறாயிரம்; முச் நூறாயிரம், மூன்று நூறாயிரம்; நா நூறாயிரம், சான்கு ஏருமரம்; ஐக் நூறாயிரம்,ஐந்து தூறாயிரம்; அறு நூறாயிரம், ஆறு நூறாயிரம்; எண் னூறாயிரம், எட்டு நூறாயிரம், ஒன் பது நூறாயிரம் எனவரும். உரையிற் கோடல் என்பதனான், தொள்ளாயிரம் என்ற முடிவோ மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியாதென்று கொள்க - முன்' என்பதனான் இன் சாரியை பெற்று ஒன்பதினூறாயிரம் என்றும் ஆம். நிலை' என்றதனான், மூன்றும் ஆறும் இயல்பாய் முடியும் முடியின் கண் கெடு முதல் குறுகாமை கண்டு கொள்க. இன்னும் அதனானே நானூறாயிரம் என்புழி வரு மொழி கோக்கேடு கொள்க.