உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அரிவாள்தாய நாயனார்

விக்கிமூலம் இலிருந்து

அரிவாள்தாய நாயனார் பெரிய புராணங் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். சோழ நாட்டில் கணமங்கலத்திலிருந்த வேளாளர். வறுமையால் மெலிந்த நிலைமையில் கால் இடறவே, தாம் சிவனுக்குக் கொண்டுவந்த செந்நெலமுதும் செங்கீரையும் மாவடுவும் கமரில் சிந்தியது கண்டு, கையிலிருந்த அரிவாளால் தம் கழுத்தை அரியப்புகுகையில் இறைவனது கை அந்தக் கமரினின்று எழுந்து அவரது கையைப்பற்றித் தடுத்தது. அதே சமயத்தில் கமரில் விடேல் விடேல் என்று மாவடுவைக் கடிக்கும் ஒலியும் கேட்டது.