பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் நிலமையும்

சுகதுக்கங்களைச் சமமாகச் கொள்வதுமான வாழ்க்கையை அடைய விரும்புகின்றவன் எவ்வளவு அதிகமாக மெய்வருத்தமுறச் சித்தமாயிருத்தல்வேண்டும்.

இதோ! கொடிய வறுமையுற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் தனது பறநிலைமைகளும் வீட்டுச் சௌகரியங்களும். சீர்ப்படவேண்டுமென்று மிகுந்த விசாரம் கொண்டிருக்கிறான்; அவ்வாறிருந்தும், தனக்குக் கூலி போதாதென்ற காரணத்தால் தன் வேலையைச் சரியாகச் செய்யாமல் தனது எஜமானை ஏமாற்ற எத்தனித்தல் நியாயமென்றே எண்ணுகிறான். அத்தகைய மனிதன் ஷேமத்துக்கு ஆதாரமான தத்துவங்களின் முதல்பாடமும் அறியாதவன். அவன் தனது வறுமையை ஒழிப்பதற்குத் தகுதியற்றவனாயிருப்பதுமன்றிச் சோம்பலும் வஞ்சகமும் இழிவும் பொருந்திய நினைப்புக்களை நினைத்துக்கொண்டும் செயல்களைச் செய்துகொண்டும் தனது முந்திய வறுமையினும் மிகக்கொடிய வறுமை தன்பால் வந்து சேரும்படி செய்துகொண்டிருக்கிறான்.

இதோ! மிதமிஞ்சிய உணவை உட்கொண்டதனால் உண்டாகி, நீங்காத துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு வியாதிக்கு இரையாகி வருந்துகின்ற ஒரு செல்வவான் இருக்கிறான். அவன் அவ்வியாதியை ஒழிப்பதற்கு அனைத்து பணம் செலவு செய்யச் சித்தனாயிருக்கிறான். அனாள், அவன் மிதமிஞ்சி உண்ணதை

24