பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


ஆனால் 20 ஆண்டுகளாகச் சுதந்திர நாடாக இருந்தோம்; திட்டம் பல போட்டோம்; இன்னும் வறுமையிலும்--இல்லாமை இருளிலும் உழல்கிறோம். இந்த வறுமையைப் போக்குவதும், அறியாமையைப் போக்குவதும் கூடத்தான் சுதந்திரப் போராட்டத்தின் கூறுகளாகும்.

ஏழை மக்கள் உரிமை பெற-தொழிலாளர் உரிமை பெறப் போராடுவது--சுதந்திரப் போராட்டத்தில் ஒரு கூறாகும்!

எல்லோரும் இந்நாட்டு மக்கள், எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் இந்நாட்டு மன்னன்--என்ற குறிக்கோலுக்காகப் பாடுபடுவதும்--சுதந்திரப் போராட்டத்தின் குறிக்கோளாகும்.