பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

அவரிடம் ராஜாஜி அவர்கள், "இந்த சுத்ந்திர நாளை யாகிலும் ஒரு கட்சிக்குச் சொந்தம் என்று ஆக்கிவிடாமல், நாட்டுக்குச் சொந்தம் என்றாக்கி-நாடே கொண்டாடும் படி இருந்திருக்கலாம்-” என்று சொன்னார். அதற்குச் சஞ்சீவரெட்டி இருந்திருக்கலாம்". என்று கூறினார். நான் அந்தக் கேள்விக்கு எதுவுமே கூறவில்லை! சுதந்திர நாள் ஒரு கட்சிக்கு மட்டும் உரியதல்ல சுதந்திர நாள் என்பது கட்சி அடிப்படையில் அல்லா மல் நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டியது. அப் படித்தான் பிற நாடுகளில் கொண்டாடுகிறார்கள். பாரிஸ் நகரில் அந்த நாட்டுச் சுதந்திர நாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்! பாடத் தெரிந்தவர் கள் மட்டுமல்ல-அந்த ஒரு நாளில் பாடத் தெரியாதவர் களும் நாட்டைப்பற்றிப் பாடுவார்கள்! எங்கெங்கும் விழாக் கோலம் இருக்கும்! மகிழ்ச்சிக் கொண்டாட்டம் இருக்கும் என்று ஏடுகளில் படித்திருக்கிறேன். ஆனால் இங்கு ஒரு கட்சிக்கு மட்டுமே உரியது சுதந்திர நாள் என்று ஆக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது உலகப் போரில் அழிக்கப்பட்ட நாடு களான ஜப்பானும் ஜெர்மனியும் - பெரும் தாக்குதலுக் காளான ரஷ்யாவும் மீண்டும் தங்களை வளர்த்துக் கொண்டு' பிறருக்கும் உதவ முன்வருகின்றன. இத்தனையையும் யுத் தம் நடந்து முடிந்த 15 ஆண்டுகளில் செய்து முடித்தார்கள். 15 வருடத்தில் மயானக் குழியிலிருந்து எழுந்து மாடியில் உலவுவது போன்ற உயர்நிலை அடைய முடிந்தது அந்த நாடு சுளால்!