பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


கிழவிக்கு மட்டும், காலணாக் கடுதாசி கிடைக்க வில்லை-- திரும்பியவர்களிடமிருந்து, மகனைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை.

அன்று கிழவிக்கு, வழக்கமான வேலை கிடைத்து விட்டது--வண்டியோட்டி வரதன், அந்தப் பக்கத்திலே 'பஸ்' ஏற்பட்டுவிட்டதால், நொடித்துப் போனான்--ஆகவேண்டி ஓட்டும் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு, அக்கரை போக தீர்மானித்து விட்டான்--அவனிடம் 'கடுதாசி' கொடுத்தனுப்பும் வேலை, கிழவிக்கு.

"அவ குலுங்கி மினிக்கித் திரியும் போது எனக்குத் தெரியும், அவகெட்டுப் போவா என்பது" என்று கூறுவார்கள் தலை நரைத்தவர்கள், வள்ளியைப் பற்றி வள்ளி தவறியவள் !

ஆடு வெட்டி ஆண்டியப்பன் தாலி கட்டி வள்ளியைப் பெறவில்லை--தாலி கட்டிய தாண்டவன் காலமான பிறகு வள்ளி நெல் குத்தி ஜீவித்து வந்தாள். பக்கத்துக் கிராமத்திலே நெல் அரைக்குமியந்திரம் அமைந்த பிறகு அவளுக்கு பிழைப்புக்கு வழி அடைத்துப் போய் விட்டது. ஆண்டியப்பன் அவளை ஜாடையாகக் கவனிக்க ஆரம்பித்தான்--வள்ளி, "நாசமாகப் போவான் மாரி சரியான கூலிகொடுக்கப் போகிறா பார்" என்று சபித்தாள்--அவன் அஞ்சவில்லை--அவள், "அண்ணன்” என்று முறை கொண்டாடி, அரை கால் கடன் கேட்டுப் பெற்று வந்தாள். அவன வட்டி கேட்கவில்லை, அசலைப்பற்றியும் கவலைக் காட்டவில்லை--அவள் புரிந்து கொண்டாள்--வெறுப்பாக இருந்தது--ஆனால்--எவ்வளவு காலம் வறுமையுடன் போராட முடியும்--"ஐயயோ! வேணாமுங்கோ" என்று கொஞ்சும் குரலில் தொடங்கி' "எப்பவும் கைவிட மாட்-