பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


தேர்தலைப் பற்றி அல்ல. அரிசி விஷயமாகத்தான் மக்களால் அதிகமான அக்கரை காட்டமுடியும்.

மக்களாட்சி முறைக்குத் தேவையான, தேர்தல் யந்திரத்தையே விலைக்கு வாங்கி விடக்கூடிய அளவு பொருளாதார பலம் சிலரிடமும்,செக்குமாடென உழைத்தால்தான் வாழவே முடியும் என்ற நிலையுள்ள பொருளாதார பீடை பலரிடமும் இருக்கும் பொருளாதார பேதமுறை ஒழியவேண்டும்

இவ்வளவும் நடைபெற்றால்தான், உண்மைச் சுதந்தரம் மலரும்--மக்கள் சமுதாயம் மிக்க கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த மக்களாட்சி முறை, இன்ப புரிக்கு ஏற்ற இலட்சியப் பாதையாகும், நாடு புன்னகை பூங்கா வாகும்.