உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




23. இனம், உலகம் வளர்க்கும்

இன இயக்கம்

ம்

ஆரியப்பண்பு தமிழகத்திலும் சூழ் நிலங்களிலும் பரவிய அளவில்தான் சென்ற இரண்டாயிர ஆண்டுகளில் கீழ்திசை படிப்படியாகக் கீழ்ப்பட்டு வந்துள்ளது.திராவிட நாடு அமைந்து, கீழ் திசையில் ஒரு பகுதியிலேனும் திராவிடப் பண்பு தழைத்துப் பரவ வழி ஏற்பட்டால், கீழ்திசை மேல்திசையுடன் எல்லா வகையிலும் முனைப்பாகப் பரந்து வளரும் என்பதில் தடையில்லை. ஏனென்றால் மேல்திசை முன்னேற்றத்துக்கு ஆரியப் பண்பின் அலைகள் அங்குச் சென்று எட்டாமையே காரணம். அதுபோலவே கீழ்திசையின் கிழக்கும் தெற்கும் ஓரளவு முன்னேற்ற மடைந்துள்ளதற்கு அங்கே திராவிடப் பண்பு முற்றிலும் அழியாமல் ஓரளவாவது நிலவ இடம் ஏற்பட்டி ருப்பதே காரணம் என்றும் காணலாம்.

திராவிட நாடும், தென்கிழக்காசியாவும், ஆசியாவும் நிலவு லகின் இயற்கை மையங்கள். அவை யாவுமே இயல்பான வளங்கள், வளப்பங்கள் உடையவை. இவை மட்டுமோ, அவையே மனித நாகரிக வரலாற்றில் நீண்ட காலம் முதலிடம் பெற்றவை. திராவிட நாடு பிரிவுற்ற ஒரு சில நாட்களில், இந்த இயல்பான, வரலாற்றடிப்படையான வாய்ப்பை ஆசியா மீண்டும் எளிதில் பெற்றுவிட முடியும். இங்ஙனம் திராவிட நாட்டுப் பிரிவினை திராவிட நாட்டின் வருங்கால வளமாக மட்டும் நின்றுவிடாது. அது உடனடியாகத் தென்கிழக்காசியா முழுவதையும், அடுத்த படியாக ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் ஓருலகில் தமக்குரிய ம்பெறச் செய்வதாக அமையும்.

திராவிட நாட்டுக்குள்ள இந்த இன வேறுபாடற்ற, இனம் வளர்க்கும் பண்பை நாம் வரலாற்றில் பின் சென்று 12ஆம் நூற்றாண்டில் காணலாம். அந்நூற்றாண்டுவரை இந்தியாவில்