80
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச்
சக்கரக் கோட்டத்து விக்ரமத் தொழிலாற்
புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம் வயிரா கரத்து வாரி யயிர்முனைக் கொந்தள வரசர் தந்தள மிரிய
வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப் போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகை சூடித் தென்றிசை தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடை நன்னிலப் பாவையின் தனிமையுந் தவிரப் புனிதத் திருமணி மகுட முரிமையிற் சூடித்
தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
தொன்னில் வேந்தர் சூட முன்னை
மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை
இருநில வளாக மெங்கணுந் தனாது
திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி
மேருவிற் புலிவிளை யாட வார்கடற்
றீவாந் தரததுப் பூபாலர் திறைவிடு கலஞ்சொரி களிறுமுறை நிற்ப விலங்கிய தென்னவன் கருந்தலை பருந்தலைத் திடத்தன் பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப விந்நாட் பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னுஞ் சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை வில்லது கோடா வேள்குலத் தரசர் அளத்தியிலிட்ட களிற்றின தீட்டமும் பட்டவெம் பரியும் விட்டதன் மானமும் கூறின வீரமும் கிடப்ப வேறின மலைகளு முதுகு நெளிப்ப விழிந்த நதிகளுஞ் சுழன்றுடைந் தோட விழுந்த
கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத்
தந்நா ளுகந்து தானும் தானையும்
பன்னா ளிட்ட பலபல முதுகும்
பயத்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும்