திருப்புறம்பயத் தல வரலாறு
அத்தவத்த தேவ ரறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப் புத்தகங்கைக் கொண்டு புலித்தோல் வீக்கிப் புறம்பயநம் மூரென்று போயி னாரே
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்லபுலி யதண்மே னாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியும் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலும் சூடிப்
புறம்பயநம் மூரென்று போயி னாரே
மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்டோண்மேல் நீறு கொண்டு திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயநம் மூரென்று போயினாரே
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையும் கொடுகொட் டியுங்
குடமூக்கி லங்கொழியக் குளிர்தன் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரே னென்று
நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயநம் மூரென்று போயி னாரே.
விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்டோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேற் றிங்க டன்னைத்
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
வாரிடத்தி லாட லமர்ந்த வையன்
115