116
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயநம் மூரென்று போயி னாரே
கோவாய விந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கினவி நாய கன்னும்
பூவாய பீடத்து மேல யன்னும்
பூமியளந் தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயநம் மூரென்று போயி னாரே.
சுந்தரமூர்த்தி நாயனார்
பண்-கொல்லி
திருச்சிற்றம்பலம்
அங்கமோ தியோ ராரைமேற்றளி நின்றும் போந்துவந்
தின்னம்பர்த்
தங்கினோமையு மின்னதென்றில ரீசனாரெழு நெஞ்சமே தங்குலேமங்கள் கொண்டு தேவர்க ளேத்தி வானவர்
தாந்தொழும்
பொங்குமால் விடையேறி செல்வப் புறப்பயந் தொழப்போதுமே. பதியும் சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும் கதியிலிம்மனை வாழும் வாழ்க்கையு நினைப்பொழி மடநெஞ்சமே மதியஞ்சேர் சடைக்கங்கையானிட மகிழுமல்லிகை செண்பகம் புதியபூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயந்தொழப் போதுமே.
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீ யுரையாற் றளர்ந் தறம்புரிந்து நினைப்பதாண்மை யரிதுகாண தறிதியேல் திறம் யாதெழு நெஞ்சமே சிறுகாலை நாமுறு வாணியம் புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயத்தொழப் போதுமே. நற்றொருவகைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த
களவெலாம்
செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மையேவரும் திண்ணமே மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதெழு மடநெஞ்சமே ஆற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயம் தொழப் போதுமே.