இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
74. செஞ்சி மசூதி திருப்பணியில் சையது*
செஞ்சிக் கோட்டை மசூதிச் சுவரிலும் தண்ணீர்த் தொட்டி மத்தியிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. அவை ஹிஜ்ரி 1130ல் (கி.பி. 1718) மசூதி கட்டப்பட்டதையும், ஹிஜ்ரி 1135ல் (கி.பி. 1723) தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கத் தண்ணீர்த் தொட்டி கட்டியதையும் தெரிவிக்கின்றன. அவை பேரரசர் பரூக்கியர் ஆட்சியின்போது செஞ்சி ஆளுநராக இருந்த சையத் அவர்களால் கட்டப்பட்டன.
- Annual Report on Epigraphy 307, 308 of 1939
Epigraphia Indo Moslemica 1938 P. 52