பிற்காலச் சோழர் சரித்திரம் - 1
193
இராசாதிராசன் அப்போரில் உயிர் துறந்தவுடன் போர்க் களத்திற்குச் சென்று தன் படையில் அமைதி நிலவுமாறு செய்தமையும் பின்னர் அஞ்சாநெஞ்சத்தோடு பெருவீரங் காட்டிப் போர் புரிந்து வெற்றி பெற்று, அக்குந்தள நாட்டுப் போர்க் களத்திலே முடிசூடிக் கொண்டமையும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள திருமழபாடியிற் காணப்படும் இவன் கல்வெட் டொன்றில் வரையப் பெற்றுள்ளன. கொப்பத்தில் நடைபெற்ற அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசாதிராசன் ஆட்சியில் எழுதப்பட்டிருத்தலின் ஈண்டு அவை விளக்கப் படவில்லை.
1
நம் இராசேந்திரன் கொப்பத்துப் போர்க்களத்தில் முடி சூடிக் கொண்டனன் என்று அக்கல்வெட்டு உணர்த்தும் செய்தி, ஒருகளிற்றின் மேல் வருகளிற்றையொத்
துலகுயக்கொளப் பொருதுகொப்பையிற்
பொருகளத்திலே முடிகவித்தவன்
என்று கலிங்கத்துப் பரணியிலும் ஆசிரியர் செயங்கொண்டாரால் கூறப்பட்டிருத்தல் காண்க.
அன்றியும், இவ்வேந்தன் அக் கொப்பத்துப் போரில் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றிக் கொண்டமை,
‘பற்றலரை
வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும்’3
என்றும்,
'கொலையானைப்
பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் 4
என்றும், கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தரால் தம் உலாக்களில் குறிப்பிடப்பட்டிருத்தல் உணரற்பாலது.
1. Ibid, Vol. V, No. 647.
2. கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம், பா. 27.
,
3. விக்கிரமசோழன் உலா, வரிகள் 38-40.
4. இராசராசசோழன் உலா, வரிகள் 46-48.