240
சேர்க்கைII
சோழ மன்னர்களைப் பற்றிய பழைய பாடல்கள்
முதற்குலோத்துங்க சோழன்
ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர்
அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து
தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது.
1
கோட்டந் திருப்புருவங் கொள்ளா வவர்செங்கோல்
2
கோட்டம் புரிந்த கொடைச் சென்னி - நாட்டஞ்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்
சிவந்தன செந்தீத்தெற
கரடத்தான் மாரியுங் கண்ணால் வெயிலும்
3
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ் சொரியுமால் நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து வாளாற் கவர்ந்த வளம்.
தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில் விடங்குலவு வெள்வாள் விதிர்ப்ப- நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ வாண்மே வியகலிங்கர் மண்.
வாட்டாறு கொங்கம் வடகலிங்கந் தென்மதுரை கோட்டாறுங் கொண்ட குலதீபன்- ஏட்டில்
5
4
1.
எழுத்திருபத் தெட்டிட்டா னென்றரசர் கேட்டுக் கழுத்திருபத் தெட்டிட்டார் காண்.
தண்டியலங்காரம்,106 மேற்கோள்.
2. வீரசோழியம், அலங்காரப்படலம், 31 மேற்கொள்.
3. தண்டியலங்காரம், 59 மேற்கோள்
4. கலிங்கத்துப் பரணிக் கையெழுத்துப் பிரதிகளின் இறுதியிற் கண்ட பாடல்; பெருந்தொகை, பக். 178.
5. மேற்படி