22
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8
வித்தும் விண்ணுலகிலிருந்து பெறற்கரிய கரும்பை இவ்வுலகிற் கொணர்ந்தனரென்பது,
“அமரர்ப்பேணியு மாவுதியருத்தியு
மரும்பெறன் மரபிற்கரும்பிவட்டந்து நீரகவிருக்கையாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர்போல”
என்னும் புறப்பாட்டினடிகளால் அறியப்படுகின்றது.
இம்மழவர்பெருமான் யுத்தத்திற் பேர்பெற்றவீரன். இவன் பரணர்[1] என்னும் நல்லிசைப் புலவர் புகழ்ந்து பாடும்படி கோவலூரை வென்றா னென்று 99- ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. அன்றியும், இவன்றனக்குப்பகைவர்களாய ஏழரசருடன் போர் செய்துவாகை மிலைந்தனன்[2] இதனை,
”..அமையாய்செருவேட்
டிமிழ்குரன் முரசினெழுவ ரொடுமுரணிச்
சென்ற மர்கடந்து நின்னாற்ற றோன்றிய வன்றும்பாடுநர்க்கரியை”
என்னும் புறப்பாட்டடிகளால் அறியலாம் .
இவன், நல்லிசைப்புலவராகிய ஔவையாரை, அக்காலத்துக் கச்சியையாண்ட தொண்டைமானுழைத் தூதனுப்பியதாக 95- ம் புறப்பாட்டால் தெரிகிறது. இவன் எக்காரணம்பற்றி அங்ஙனந் தூதனுப்பினானென்று தற்காலத்து அறியக்கூடவில்லை. அத்தொண்டைமான் தன் போர்வலியின் பெருமையுணருமாறு தன்படைக்கலக் கொட்டிலைக் காட்ட ஔவையார் அவற்றைப் பார்த்து ”இப்படைக் கருவிகளெல்லாம் போரிற்பயன் படாமை யாற் பீலியணிந்து மாலைசூட்டிக் காம்புதிருத்தி நெய்யணிந்து
- ↑ அதிகமான் வீரமுங் கொடையும் பற்றிப் பரணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பது கீழ்க்குறித்த அகநானூற்றுச்செய்யுட்களால் விளங்கும்.
..நெடுநெறிக்கு திரைக்கூர் வேலஞ்சி கடுமுனையலைத்த கொடு
விலாடவராகொள் பூசலிற்பாடு சிறந்தெரியும் பெருந்தொடி” (அகம். 372) ”..வாய்மொழி
நல்லிசைபிழைப்பறியக் கழறொடியதியன்” (அகம். 162) - ↑ அவர்களது நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டனன் என்பர் புறநானூற்றுரையாசிரியர்.