உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46

❖ மறைமலையம் - 3 ❖

யான் மண்ணுலக விவகாரங்களிற் சிறிதும் பற்றின்றி வேறாய்ப் போய்விட்டமையால், திரும்பவும் அரசாங்க வுலகமாகிய அரங்கத்தை வந்து காண்பது எனக்குப் பிரியமில்லா ததாயிருக்கின்றது. இப்போது மாத்திரமன்று; எனக்கெப்போதுமே அது பிரியமில்லாததாயிருந்தும், என் வமிசத்தார்க்கு யான் செலுத்தவேண்டிய கடமையின் பொருட்டாகவே யான் அதில் சம்பந்தப்பட்ட நிலையிலிருந்தேன். இப்போதோ யான் இறைவனுடைய வியக்கற்பாலதாம் அருள் வெளிப்பாட்டையும், அவ்வருள் விளக்கம் தேவகுமாரன் வழித்தாக மிகப் புலப்படுதலையும், அவ் வருட்டோற்றத்தின் ஒரு நிலையாய் அதனோடு இயைபுற்றிருக்கும் ஞான சமஸ்காரத்தையும் உணர்ந்து அதனோடு ஒன்றுபடும் முயற்சியில் நிரம்பவுங் கருத்தூன்றியிருக்கின்றேன். ஆகையால், மற்றும் ஒருமுறை இவ்வரசாங்க அரங்கத்திற் சம்பந்தப்படுவது எனக்கு மிகவும் அருவருப்பாயிருக்கின்றது, மிகவும் வெறுப்பாயிருக்கின்றது.

ஸ்டெட்: "நல்லது, ஐயா கிளாட்ஸ்டன் துரையவர்களே! முன்போலவே இப்போதும் இது கடமையிற் சேர்ந்ததொரு காரியம். அதனால் நன்மை விளையுமென்று நீங்கள் கருதாவிட்டால், அதனைப்பற்றி ஒரு சொல்லாவது நீங்கள் சொல்லும்படி யான் தங்களைக் கேட்கமாட்டேன்.

கிளாட்ஸ்டன் : “அன்புள்ள ஐயா! தூலதேகத்தை விட்டு வந்தது முதல் யான் அரசாங்க விஷயங்களில் தொடுப்பின்றி இருத்தலானும், நிலையின்றி மறைந்து போகும் மண்ணுலகக் காரியங்களைப் பார்க்கிலும் என்றும் நிலைபேறாயுள்ள ஆன்மலாப விஷயத்தில் என் கருத்தெல்லாம் ஊன்றி நிற்றலானும், இப்போது நீர் உசாவிய விஷயத்தில் என் கடமை யாதென்று சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். ஆயினும், இப்போது இத்தேசத்தாரின் மனநிலையைக் கலங்கச் செய்துவரும் பகிரங்க விஷயங்களில் என் கவனமானது ஆராய்ந்து தெளிவாகத் திருப்பப்பட்டிருந்ததனாலே, இவ் விஷயங்களின்மேல் யான் கொண்ட கருத்துக்களைச் சுருக்கமாக உரைக்கின்றேன். என்னுடைய அபிப்பிராயத்தில், மேல் மண்டபச் சபையார் பொருள் சம்பந்தமாக வந்த இந்த ஏற்பாட்டை அங்கீகரியாமற் றள்ளிவிடுவார்களானால், அது அவர்கட்கு நல்லறிவு கொண்ட நடக்கையாக மாட்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/79&oldid=1628591" இலிருந்து மீள்விக்கப்பட்டது