150
மறைமலையம் – 9
205. கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக்
210. கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது பல்பண்டம் பகர்ந்து வீசுந்
தொல்கொண்டித் துவன்றிருக்கைப் பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
215. சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய 220. வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர்பிணி யகத்திருந்து பீடுகாழ் முற்றி யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிப்புக் காங்கு
225. நுண்ணிதினுணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் துருகெழு தாய மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்
230. முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா ளுகிருடை யடிய வோங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு